பிரபல நடிகர் பிரபுதேவா ( Prabhu Deva ) கொரோனா ஊரடங்கின்போது ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்பொழுது முதன்முறையாக தன்னுடைய மனைவியை பொதுவெளிக்கு அழைத்து வந்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாகஇரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான நிலையில் நடிகை நயன்தாரா-வை காதலித்து வந்தார் நடிகர் பிரபுதேவா.
இதனை தொடர்ந்து இரண்டு குழந்தைகளையும் தன்னுடைய முதல் மனைவியையும் அம்போ என விட்டுவிட்டு நடிகை நயன்தாரா பின்னால் சுற்றிக் கொண்டிருந்தார்.
ஆனால் நடிகை நயன்தாராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிறிந்தார் நடிகை பிரபுதேவா. இதனால் தனி மரமாக இருந்த நடிகர் பிரபுதேவா தற்பொழுது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்திருக்கிறது.
இடையில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்பொழுது வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் பிரபுதேவா தொடர்ந்து ஹீரோவாக சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஹிந்தியில் சல்மான் கான் நடிக்க ஒரு புதிய படத்தை இயக்கவும் இருக்கிறார்.
அதன்பிறகு பிரபுதேவாவின் உறவினரை உறவுக்கார பெண் ஒருவரையே இறந்ததாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அது உண்மை என தெரிய வந்திருக்கிறது.
பிரபுதேவா கொரோனா காலகட்டத்தில் முதுகு வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துரான ஹீமாசிங் என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள் எனவும் திருமணத்திற்கு பெரிதாக யாரிடமும் அறிவிப்பு வெளியிடவில்லை எனவும் தெரிய வந்திருக்கிறது.
இந்நிலையில், முதன்முறையாக தன்னுடைய மனைவியுடன் இரண்டாவது மனைவியுடன் திருப்பதிக்கு சென்று வந்த பிரபுதேவாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஆன்மீக பயணமாக திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருக்கின்றார் பிரபுதேவா.