பிரக்யா நாக்ரா,(Actress Pragya Nagra) மிக அழகான நடிகையாக பார்த்தவுடன் மனதில் தங்கி விடுகிறார். தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். மலையாளத்தில் ஒரு படம் நடித்திருக்கிறார், வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.
தமிழில் வரலாறு முக்கியம், என்4 ஆகிய படங்களிலும், எருமசாணி யூடியூப் சேனலில் 2021ல், ‘லாக்டவுன் காதல்’ என்ற வெப் சீரிஸ்சில் கதாநாயகியாக பிரக்யா நாக்ரா நடித்திருந்தார். இது, ரசிகர்களிடம் அதிக கவனத்தைப் பெற்ற சீரிஸ் ஆக இருந்தது.தமிழ், மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பை தேடி வருகிறார், மலையாளத்தில், ‘நதிகளில் சுந்தரி யமுனா’ என்ற படத்தில் பிரக்யா நாக்ரா அறிமுகமானார்.
ஹரியானா மாநிலம், அம்பாலாவில், பிரக்யா நாக்ரா பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர். டெல்லியில் வசிக்கும்போதே பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார்.
பிரக்யா நாக்ராவின் தந்தை இந்திய ஆயுதப்படையில் பணிசெய்தார். அதனால், அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் பணிபுரிந்தார். அப்போது தந்தையை பார்ப்பதற்காக அடிக்கடி, பிரக்யா நாக்ரா அடிக்கடி சென்னை வந்து சென்றார்.
அப்போது, சென்னையில் உள்ள தமிழ் சினிமா துறை பற்றிய பல விவரங்களை தெரிந்துகொண்டார். இதனால், சினிமாவில் நடிக்கும் ஆர்வம் அவருக்கு மேலும் மேலும் அதிகரித்தது.
டில்லியில் உள்ள கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்த போதே, பிரக்யா மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனால், விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் பிரக்யா நாக்ரா நடித்தார்.தமிழில் ஜீவாவுடன் வரலாறு முக்கியம் என்ற படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக மலையாள பெண்ணாக பிரக்யா நாக்ரா நடித்தார்.
இந்த படம், ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. சில நாட்களிலேயே தியேட்டர்களை விட்டு ஓடியது. எதிர்பார்த்த வரவேற்பு படத்துக்கும் கிடைக்கவில்லை. பிரக்யா நாக்ராவுக்கும் அடுத்தடுத்த படவாய்ப்புகள் வரவில்லை.
எனினும் சோஷியல் மீடியாவில் இருக்கும் பிரக்யா நாக்ரா, அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து, ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். மிக அழகான இவரது புகைப்படங்கள், வெகு வேகமாக பகிரப்பட்டு வைரலாகின்றன.
இப்போது, பட்டுப்பாவாடை, ஜாக்கெட்டில் உடல் நிறைய ஆபரணங்களோடு பூங்கா ஒன்றில், எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள், பார்ப்பவர் மனங்களை உடனே கொள்ளை கொண்டுவிடும்படி மிக மிக அசத்தலாக இருக்கின்றன.
சில வேளைகளில், சுமாரான அழகுள்ள நடிகைகள் கூட, தொடர்ந்து மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்கிற நிலையில், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுவிடுகிற நிலையில், பிரக்யா நாக்ரா இத்தனை அழகாக இருந்தும் இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் இல்லையா, என ரசிகர்கள் கமெண்ட் பாக்சில் புலம்பித் தீர்க்கின்றனர். அந்த அளவுக்கு, தன் பளிச்சிடும் அழகால் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார்.
எனினும், சினிமாவில் பெரிய திரையில் காட்ட வேண்டிய தனது அழகை, கவர்ச்சியை ஆன்ட்ராய்டு போன்களில், சின்ன தொடுதிரைகளில் அடிக்கடி பதிவேற்றம் செய்து, குளிர்வித்து வருகிறார் பிரக்யா நாக்ரா.
இரவுநேரங்களில், பிரக்யா நாக்ராவை புகைப்படங்களை பார்த்து, அவரது கவர்ச்சியில் திணறிப்போகும் ரசிகர்கள், இந்த அழகான பொண்ணைப் பார்த்தால், வயாக்ரா சாப்பிட்ட எபெக்ட் வருதுப்பா என, காதல் மயக்கத்தில் புலம்பி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்,