பெங்களூருவை பூர்வீமாக கொண்டவர் நடிகை பிரணிதா சுபாஷ் ( Pranita Subhash ) கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறையின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார்.
அதன் காரணமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கன்னடத்தில் பொர்க்கி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை பிரணிதா சுபாஷ் அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் என்ற திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
அதன் பிறகு, நடிகர் கார்த்திக் உடன் சகுனி நடிகர் சூர்யாவுடன் மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணமான பத்தே மாதத்தில் ஒரு குழந்தைக்கு தாயுமானார்.
தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் திருமணத்திற்கு முன்பு விட திருமணத்திற்கு பிறகு படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி விடுவார் என்ற தகவல்கள் கிசு கிசுக்கப்பட்டது. ஆனால், அவையெல்லாம் உண்மையில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது மட்டும் ஐந்து படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருக்கிறார் நடிகை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சர்ச்சைக்குரிய மலையாள நடிகரான திலீப் நடிப்பில் உருவாக உள்ள 148வது திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக ஒப்பந்தமாக இருக்கிறார் நடிகை பிரணிதா சுபாஷ்.
இதனால் இவருக்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தன பட வாய்ப்புக்காக யாருடன் வேண்டுமானாலும் நடிப்பீங்களா..? என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டன. பல்வேறு நடிகைகள் நடிகர் திலீபின் படங்களில் இனி நடிப்பதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் நடிகை பிரணிதா சுபாஷ் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருமணத்திற்கு முன்பு இருந்ததை விடவும் இப்பொழுது அதீத கிளாமராக புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று ரசிகர்களுக்கு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.