“என் உடம்பு அதுக்கு சரியா இருக்கணும்..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நடிகர்கள் சிம்பு, கௌதம் கார்த்திக் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ப்ரியா பவானி சங்கர் பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் அதன் பிறகு சீரியல் நடிகையாக சில சீரியல்களில் நடித்து தற்போது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் இந்த வருடம் கல்யாணம் கமநீயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

தமிழ் தெலுங்கானா இரண்டு மொழியிலும் இவருக்கான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை பிரியா பவானி ஷங்கரிடம் 10 லட்சம் டாலர் கொடுத்தால் கிளாமரான போட்டோ சூட் இருக்கு நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதில் அளித்து பிரியா பவானி சங்கர் கிளாமரான போட்டோ சூட், ஹாட்டான போட்டோ சூட் என்று எதை வைத்து கூறுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் எனக்கு என்னுடைய உடல் வடிவத்திற்கு பொருத்தமான உடையாக இருந்தால்… அந்த உடைக்கு ஏற்றார் போல என் உடம்பு இருந்தால்.. எனக்கு பிடித்திருந்தால் நிச்சயமாக அதனை நான் அணிந்து கொண்டு நடிப்பேன்.

பத்து லட்சம் டாலர் கொடுத்தால் நான் கிளாமராக போஸ் கொடுப்பேன் என்றால் முதலில் அந்த பத்து லட்சம் டாலரை கொடுப்பதற்கு ஒருவர் இருக்க வேண்டும். அதன்பிறகு தான் அது பற்றி முடிவு செய்ய முடியும்.

மற்றபடி கிளாமரான போட்டோஸ்.. ஹாட்டான போட்டோஸ் என்றெல்லாம் எனக்கு எதுவும் வித்தியாசம் தெரியாது. என்னுடைய உடல் வடிவத்திற்கு பொருத்தமான உடைகளை எனக்கு பிடித்தமான உடைகளை அணிந்து கொண்டு நான் புகைப்படங்கள் போஸ் கொடுக்கிறேன். அதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

மற்றபடி இது ஹாட்டான போட்டோ ஷூட் இது கிளாமரான போட்டோ சூட் என்று எந்த ஒரு வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை என பதிவு செய்திருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.