தமிழ் திரை உலகில் தற்போது தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் பிரியா பவானி ஷங்கர் () [Priya Bhavani Shankar]என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை ஆரம்பித்த இவர் தமிழ் திரையுடரில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
முதல் படத்திலிருந்து அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது ஆனந்த வகையில் வித்தியாசமான கேரக்டர்களை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயம் ரவியோடு நடித்த அகிலன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டி இருந்தார்.
சமூக வலைத்தளத்தின் பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விடுவார்.
மேலும் அண்மையில் இவர் பத்து தல படத்தின் விளம்பரத்திற்காக கௌதம் கார்த்திக் கோடு கலந்து கொண்டு இருந்தபோது செய்தியாளர்கள் இவர்கள் கேட்ட கேள்விக்கு படு நாசுக்கான முறையில் பதில் அளித்து இருக்கிறார்.
அந்த கேள்வி என்னவென்றால் ஒரு பில்லியன் டாலர்கள் கொடுத்தால் அவர் கவர்ச்சியான போட்டோ சூட்டில் பங்கேற்பாரா? என்ற கேள்வி தான் அது. இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத பிரியா பவானி சங்கர் மிக சாமர்த்தியமான முறையில் பதில் அளித்தார்.
அந்த பதிலானது தனது உடல் அமைப்பு அதுபோன்ற போட்டோ சூட்டுக்கு ஏற்றபடி இருந்தால் கண்டிப்பாக செய்யலாம் ஆனால் என்னுடைய உடல்வாகு அதற்கு தகுந்தது போல் இல்லை என்று பளிச்சென்று பதிலளித்தார்.
எனவே தான் எனது உடலுக்கு தக்கவாறு உள்ளதை நான் செய்கிறேன். மேலும் எனது உடலை வெளியே காட்டவில்லை. நீங்கள் தரும் ஒரு பில்லியன் டாலரை பெற எனக்கு தகுதி இருந்தால் கட்டாயம் அதை நான் செய்ய முயற்சிப்பேன் அத்தோடு நீங்கள் எங்கள் அருகில் இருக்க வேண்டும்.
இந்த பதிலை கேட்டு அனைவரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள் சமயோகித புத்தி மிகச்சிறப்பான முறையில் ப்ரியா பவானி சங்கரிடம் வேலை செய்துள்ளது என்று தான் கூற வேண்டும்.