தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் தன்னுடைய திருமணம் தள்ளிப் போவதற்கான காரணம் இதுதான் என்று ஒரு காரணத்தை கூறினார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கோடிகளில் புரளும் நடிகையாக உருவெடுத்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 20 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றையும் வாங்கியிருந்தார்.
சமூகவலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் எந்த ஒரு பேட்டியில் இருந்தாலும் கலகலப்பாக பதில் கொடுப்பது வழக்கம். தற்பொழுது ஒரு டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதும் அன்றாடம் நடந்து வருகின்ற ஒரு விஷயம்.
இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லாரி லாரியாக லைக்குகளை கொட்டி வருகின்றனர். கல்லூரிக் காலம் முதலே ராஜவேலு என்ற நபரை காதலித்து வரும் பிரியா பவானி சங்கர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை பிரியா பவானி சங்கர் நான் கல்லூரி படித்து முடித்தவுடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால், எதிர்பாராத விதமாக எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் திருமணம் தள்ளிப் போய்விட்டது சினிமாவில் எனக்கான ஒரு இடம் கிடைத்த பிறகு அதனை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டால் அது என்னுடைய எதிர்காலத்திற்கு சிறப்பானதாக இருக்குமா..? என்ற கேள்வி எனக்குள் இருந்தது.
எனவே முடிந்த வரை சினிமாவில் நடித்து எதிர்காலத்தை பாதுக்காத்துக்கொண்டு குடும்பம் குழந்தைகள் என வாழ்க்கையில் செட்டில் ஆவது தான் என்னுடைய விருப்பம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், யானை படத்தில் இடம் பெற்ற இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய இடுப்பு அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.