நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.
பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா மோகன் தமிழில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் பலராலும் அறியப்படும் நடிகையாக உருவெடுத்தார்.
அதனை தொடர்ந்து நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்த பிரியங்கா மோகன் தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பட வெளியீடு விழாவிற்கு வந்திருந்த நடிகை பிரியங்கா மோகன் ட்ரான்ஸ்பரண்டான புடவையில் கவர்ச்சி தேவதையாக வந்திருந்தார்.
நிகழ்ச்சி முடித்து காரில் ஏறி திரும்பச் செல்ல முயன்ற பிரியங்கா மோகனை சுற்றி வளைத்த ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர்.
கார் கதவை திறந்த உடன் பிரியங்கா மோகனை பார்க்க ஒருவர் மீது ஒருவர் முண்டியடிக்கவே பதறிப்போனார் பிரியங்கா மோகன்.
மேலும் காருக்குள் கையை விட்டு தங்களுடைய செல்போன் மூலம் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள சில ரசிகர்கள் அத்து மீறினார்கள்.
இதனை கண்டு பயந்து போன பிரியங்கா மோகன் விட்டா உள்ள வந்துருவீங்க போல இருக்கு.. என்ன உள்ள வரீங்களா..? என்று கடுப்பான முகத்துடன் சில ரசிகர்களை கத்தினார்.
அதனை தொடர்ந்து அங்கு இருந்த சில ரசிகர்களிடம் அவர்களுடைய கைப்பேசியை வாங்கி அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.