பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி பொங்கல் அதுவுமாக கவர்ச்சி பொங்கல் வைத்திருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார் நடிகை பிரியங்கா நல்காரி.
அதன் பிறகு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்த இவர் சினிமா வாய்ப்பு தொடர்ந்து கிடைக்காததால் சீரியல் பக்கம் கரைஒதுங்கினார். இடையில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளனாகவும் கூட சில காலம் பணியாற்றி இருக்கிறார் நடிகை பிரியங்கா நல்காரி.
இதன் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இவருக்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் ரோஜா என்ற சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணைய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார் என்று கூறலாம். இந்த சீரியல் மூலம் நடிகை பிரியங்கா என்ற இவளது உண்மையான பெயர் பலரும் மறந்து போனார்கள்.
இவருடைய பெயரை ரோஜா என்று பலரும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ரோஜா கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக நடித்திருந்தார் அம்மணி.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியவர் என்னை பலரும் பொது இடங்களில் பார்க்கும் பொழுது ரோஜா ரோஜா என்று அழைக்கிறார்கள் நானும் அந்த சீரியலில் நடித்து அதன் மூலம் என்னுடைய உண்மையான பெயர் மறந்து விட்டேன் அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரத்தை நான் உள்வாங்கி நடித்திருக்கிறேன் என்று பெருமையாக பேசி இருந்தார்.
மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.