Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஒரே ஆபாசம்.. இனியும் இதுல இருக்கனுமா… பாடகி செந்தில் கணேஷ் ராஜலட்சுமியை விளாசிய பிரபலம்..!

கிராமத்து பாடல்கள் பாடும் கலைஞர்களுக்கு மிக அரிதாகதான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கிறது. அப்படியாக வாய்ப்புகள் பெற்று மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர் ராஜலட்சுமி மற்றும் செந்தில் ஜோடிகள்.

செந்திலும் ராஜலட்சுமியும் நிறைய கிராமத்து பாடல்களை பாடி இருக்கின்றனர். அவர்களுக்கு விஜய் டிவியின் மூலமாக மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு கிடைத்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது விஜய் டிவி இவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

விஜய் டிவி மூலம் பிரபலம்:

அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றனர் ராஜலட்சுமி மற்றும் செந்தில் ஜோடிகள். தொடர்ந்து நிறைய சினிமா பாடல்களையும் பாட துவங்கினர். பெரும்பாலும் கிராமம் சார்ந்த சினிமா பாடல்கள் ஒன்று தமிழ் சினிமாவில் வைக்க வேண்டும் என்றாலே அதை ராஜலட்சுமிதான் பாட வேண்டும் என்கிற அளவிற்கு அவர் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கிறார்.

இந்த நிலையில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி இவர்கள் இருவரையும் மற்றும் விஜய் டிவியையும் கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் பிரபல நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி.

ராஜலட்சுமி செந்தில் தம்பதியினருக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக இருந்து வருபவர் புஷ்பவனம் குப்புசாமி. சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசும் பொழுது ஆரம்ப கட்டத்தில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி நாட்டுப்புற பாடல்கள் பாடிய பொழுது செய்த வேலைகளை பார்த்து கடுப்பாகிதான் புஷ்பவனம் குப்புசாமி அவர்களை குறித்து எதிர்மறையான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

கோபமான மூத்த பாடகர்:

அதில் அவர் கூறும் பொழுது அவர்கள் பேசுவது எல்லாம் இரட்டை வார்த்தை ஆபாசம் கலந்த பேச்சுக்கள். மக்கள் இசை கலைஞன் என்று பாடுகிறான் ஆனால் மனைவியை தனது பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆபாசமாக பாடுகிறான்.

பக்கத்தில் இருக்கும் பெண்ணிடமும் அசிங்கமாக செய்கை செய்கிறான் இவற்றையெல்லாம் யூட்யூபில் பார்த்து நான் மிகவும் நொந்து போய் விட்டேன். இவர்களையெல்லாம் பார்க்கும் பொழுது நாமும் இந்த துறையில் இருக்க வேண்டுமா? பேசாமல் பாடுவதே நிறுத்தி விடலாமா? என்று கூட யோசிக்கிறேன்.

அதுவும் அவர்கள் இருக்கும் ரியாலிட்டி ஷோக்கலில் நடப்பதெல்லாம் ரியாலிட்டி கிடையாது யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முதலிலேயே முடிவு செய்துவிட்டு பிறகு எல்லா விஷயங்களையும் செய்து அவர்களை வெற்றி பெற வைக்கிறார்கள் என்று கோபமாக பேசுகின்றார் புஷ்பவனம் குப்புசாமி. இது தற்சமயம் அதிக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version