போகப் போக, பழகப் பழக தான் ஒரு மனிதனின் இயல்பான எண்ணம் என்ன என்பது தெரியும் என்பதைப் போல ராபர்ட் மாஸ்டர் பற்றி கொஞ்ச நாள் கழித்த பின்பு தான் தனக்கு முழுமையாக தெரிந்தது என்று மனம் திறந்து கருத்துக்களை கூறியிருக்கிறார் பிக் பாஸ் ரச்சிதா.
விஜய் டிவியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 6 தற்போது முடிவுக்கு வரக்கூடிய நிலையில் அந்த வீட்டிலிருந்து ரச்சிதா கண்டிப்பாக வெளியேறி விடுவார் என்ற விஷயம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.
மேலும் இவருக்கு பதிலாக வேறு யாராவது ஒருவரை வெளியேற்றி இருக்கலாம் என்று எண்ண அலைகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பரவி விட்டது ரச்சிதாவிற்கு ஒரு நாளைக்கு 28 ஆயிரம் ரூபாய் வீதம் சம்பளம் பேசப்பட்டு 90 நாட்கள் இவர் இந்த வீட்டில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் முதன்முறையாக ராபஸ் மாஸ்டர் பற்றி பேசியிருக்கிறார். இதில் இந்த வீட்டில் இவர் இருந்தபோது இவர் மிகவும் பாசமாக அவரைப் பார்த்துக் கொண்டாராம்.
அப்படிப்பட்ட நபர் தற்போது இல்லை என்று நினைக்கும் போதே வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறியதோடு மட்டுமல்லாமல் எத்தனை கேமராக்கள் இருந்தும் தன்னை மட்டும் ஒரு கண் பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்தது அதன் ஹைலைட் என்று கூறி இருக்கிறார்.
மேலும் ராபர்ட் மாஸ்டர் ஒரு குழந்தையை போன்றவர் அவர் செய்யும் விஷயங்கள் எல்லாமே குழந்தைத்தனமாக இருக்கும் என்று அவர் கூறி இருப்பது ரசிகன் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழையில் நனைந்த போது அவர் எடுத்துக்கொண்ட பாங்கு அது மட்டுமில்லாமல் ராஜ வம்சம் டாஸ்க் முடிவில் ராபர்ட் மாஸ்டர் அதை தவறாக புரிந்து கொண்டது இதனை எல்லாம் ஒருசேர நினைத்துப் பார்க்கும்போது அவரது அன்பு என்னவென்று புரிந்து கொண்டேன்.
ஆனால் அவர்தான் தவறாக புரிந்து கொண்டார் அதை எப்படியாவது பேசி புரிய வைத்துவிடலாம் என்று நான் நினைத்தேன் என அவர் தெரிவித்தார்.