யாரோடது பெருசு.. முடியை பிய்த்து சண்டை போட்ட இரண்டு தொடையழகிகள்..! - உண்மை சம்பவம்..!

யாரோடது பெருசு.. முடியை பிய்த்து சண்டை போட்ட இரண்டு தொடையழகிகள்..! – உண்மை சம்பவம்..!

பிரபல நடிகைகள் ரம்பா மற்றும் ராய் லட்சுமி ஆகிய இருவரும் படப்பிடிப்பு தளத்திலேயே ஒருவர் ஒருவருடைய முடியை பிடித்துக் கொண்டு அடித்துக்கொண்ட சம்பவம் பற்றிய பதிவுதான்.

இது என்னப்பா இது..? இப்படி எல்லாம் கூட நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் சண்டை போடுவார்களா..? என்று நீங்கள் வியக்கலாம். ஆனால், இதையும் தாண்டி பல மோசமான விஷயங்கள் எல்லாம் நடந்து இருக்கிறது.

அதனை எல்லாம் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ள நம்முடைய தமிழகம் டாட் காம் உடன் இணைந்திருங்கள். தற்பொழுது ரம்பா மற்றும் ராய் லட்சுமி இடையே நடந்த சம்பவம் குறித்தும் எப்போது நடந்தது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு காதலன் ஒரு காதலன் என்ற திரைப்படம் வெளியானது. இப்படி ஒரு படம் வெளியானதா..? என்று கூட உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். ஆனால் படம் வெளியானது.

இந்த படத்தில் நடிகை ரம்பா மற்றும் ராய் லட்சுமி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தில் படப்பிடிப்பின் போது இருவரும் கதைப்படி நடிகை ரம்பா மற்றும் ராய் லட்சுமி என இருவரும் சேர்ந்து நடிப்பது போன்ற காட்சி.

இது குறித்து படத்தின் உதவி இயக்குனர், ரம்பா மற்றும் ராய் லட்சுமி ஆகிய இருவரிடமும் கூறியிருக்கிறார். ஆனால் இருவரும் ஒன்றாக ஒரு காட்சியில் சேர்ந்து நடிக்க மாட்டோம் என கண்டிப்பாக கூறி இருக்கின்றனர்.

இதில் யார் முதலில் ஒன்றாக நடிக்க மாட்டேன் என்று கூறினார்கள் என்று விவரம் தெரியவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் இருவருமே நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்க மாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

யார் பெரிய நடிகை.. யாரோட மார்க்கெட் பெருசு.. என்று தொடங்கிய அந்த வாக்குவாதம் கைகலப்பில் போய் முடிந்து இருக்கிறது. நடிகை ரம்பா மற்றும் ராய் லட்சுமி இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு சண்டை போட்டு இருக்கின்றனர்.

இதனால் படப்பிடிப்பு தளமே ஒரு நிமிடம் ரணகளம் ஆகி இருக்கிறது. இதனை பார்த்து அதிர்ந்து போன படக்குழுவினர் இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்து வைத்திருக்கின்றனர்.

அதன்பிறகு இருவரையும் சேர்ந்து நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தும்.. காட்சியின் தன்மை குறித்து விளக்கியும்.. பயனில்லாமல் போய்விட்டது.

அதன் பின்னால் வேறு வழியில்லாமல் இதுவரையும் தனித்தனியாக நடிக்க வைத்து ஒரே காட்சியில் இருப்பது போன்ற காட்சியை எடுத்து வந்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

பொதுவாக சினிமாவை பொருத்தவரை ஈகோ வருவதெல்லாம் சகஜம் தான். நிறைய நடிகைகளுக்கு இப்படியான சண்டைகள் வந்திருக்கிறது.

ஆனால் படப்பிடிப்பு தளத்திலேயே இருவரும் சண்டை போட்டுக் கொண்டதுதான் இங்கே விஷயம். இந்த விஷயத்தை சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பதிவு செய்திருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version