Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

நான் சினிமாவுக்கு வரதுக்கு காரணமே ராஜ்கிரண் இல்லை.. இவரு தான்.. வடிவேலு சொன்ன புது கதை..!

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு ஈடாக ஒரு காமெடி நடிகர் கோலிவுட்டில் அறிமுகமாகி தன்னுடைய இடத்தை மிகவும் ஆழமாக தக்க வைத்துக் கொண்டார் என்றால் அது வைகைப்புயல் வடிவேல் தான்.

இவர் திரைத்துறையில் அறிமுகமான புதிதிலிருந்து அவரின் மிகச்சிறந்த காமெடியும் பாடி லாங்குவேஜ்ஜூம் ஒட்டுமொத்த தமிழக சினிமா ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திழுத்தது.

இதையும் படியுங்கள்:நயன்தாராவை டம்மி ஆக்கி Thug Life காட்டும் நடிகை.. இது வேற லெவல் சம்பவம்..!

நடிகர் வடிவேலு:

எந்த ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும் அதில் வடிவேலு இல்லாத காமெடியே இல்லை என்கிற அளவுக்கு எல்லோரது படங்களிலும் வடிவேலுவின் காமெடி இடம் பெற்று விடும்.

காமெடி நடிகராகவும் குணசத்திர நடிகராகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மதுரையில் இருந்த வடிவேலுவை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியது நடிகர் ராஜ்கிரீம் தான் என்பது பல வருடமாக மக்களால் பேசப்பட்டு வருகிறது.

மதுரையில் இருந்த வடிவேலுவின் திறமையை பார்த்து ராஜ்கிரன் தான் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியதாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்: இளம் சிட்டு.. சன்னி லியோனை மிஞ்சும் கவர்ச்சி.. எல்லாமே தெரியுது.. கிறங்கடிக்கும் ஜோவிகா!

ஆனால் உண்மையில் வடிவேலுவுக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் ராஜ்கிரண் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு நடித்துள்ள ரகசியம் ஒன்று தற்போது கசிந்துள்ளது

ஆம் சினிமா மீதுள்ள மிகுந்த ஆர்வத்தினால் வடிவேலு ஒருமுறை மதுரையிலிருந்து ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு வந்து இறங்கியுள்ளார்.

அப்போது உறவை காத்த கிளி படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது அங்கு கூட்டத்தில் ஒருவராக நின்று வேடிக்கை பார்த்திருந்த வடிவேலுவை சைக்கிள் ஓட்டும் நபர் ஒருவரின் கதாபாத்திரத்தில் ஆள் இல்லாததால் அவரை அழைத்து இருக்கிறார்கள்.

வடிவேலுவின் திரைப்பயணம்:

உடனே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட வடிவேலு அதில் நடித்திருந்தார். அந்த காட்சியும் அந்த படத்தில் வந்திருந்தது.

இதையும் படியுங்கள்: 48 வயது தான்.. Daniel Balaji மரணத்திற்கு உண்மையான காரணம்.. தெரிந்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

அதன் பிறகு தான் நடிகர் வடிவேலுக்கு சினிமாவில் ஆர்வம் அதிகரிக்க தொடர்ந்து திரைப்படங்கள் நடிக்க முயற்சித்தாராம்.

அப்போதுதான் நடிகர் ராஜ்கிரனை சந்திக்க அவருடன் நட்பாக பழகி பின்னர் அவர் மூலமாக சினிமா வாய்ப்புகள் மிகவும் சுலபமாக தேடி வந்தது. இப்படித்தான் வடிவேலுவின் சினிமா பயணம் ஆரம்பித்ததாம்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version