Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

நடிகர் ராமராஜனின் உண்மையான முதல் மனைவி யார் தெரியுமா..?

80களில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்தவர் நடிகர் ராமராஜன். இவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தன.

ஒரு மாதத்தில் மூன்று படங்களில் ரிலீஸ் ஆகும் அளவுக்கு காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருந்தார் நடிகர் ராமராஜன். தற்போது வரை படத்தில் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்ற  கொள்கையோடு இருக்கிறார்.

வில்லனாகவும், குணசித்திர வேடங்களில் நடிக்க கேட்டு எத்தனையோ வாய்ப்புகள் இவருக்கு வந்த போதும் அதனை அனைத்தையும் தட்டி கழித்திருக்கிறார் ராமராஜன். இதே கொள்கையில்தான் நடிகர் மைக் மோகன் இருந்தார்.

ஆனால், தற்பொழுது நடிகர் விஜயின் கோட் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் மைக் மோகன் என்று தெரிகிறது. படம் வெளியான பிறகு தான் மைக் மோகன் என்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவரும்.

உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தவர் நடிகர் ராமராஜன். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பு பெறவில்லை. ஆனால், படம் வெளியாகி ஒரு வாரம் கழித்த பின்பு சாரை சாரையாக மக்கள் கூட்டம் திரையரங்கங்களை நோக்கி சென்றது.

இந்த திரைப்படம் ராமராஜனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ராமராஜன் சிறந்த நடிகரா..? இல்லையா..? என்பது வேறு விவாதம்.. அவருக்கு டான்ஸ் ஆட வருமா..? வராதா..? என்பது வேறு சமாச்சாரம்.

ஆனால் அவரது படங்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே மக்களின் மனதை மயக்கின. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற ஒரு நடிகர் என்றால் அது நடிகர் ராமராஜன் என்று கூறலாம்.

அந்த காலத்தில், நடிகர் கமலஹாசன் ரஜினிகாந்த் கூட இந்த அளவுக்கு சம்பளம் வாங்கியதில்லை என கூறப்படுகிறது. ஒரு படத்தில் நடிப்பதற்காக தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவர் நடிகர் ராமராஜன் என்பது இன்று வரை பலரும் அறியாத தகவல்.

இப்படி இருந்த நடிகர் ராமராஜன் தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார், கணவன் மனைவியாகவே இருவரும் வாழ்ந்து வந்தனர் என்ற கிசுகிசுவும் அந்த காலத்தில் இருந்தது.

ஆனால், நடிகர் ராமராஜன் தன்னுடைய காதலியை பிறிந்தார். இதற்கு முக்கிய காரணம் நடிகர் ராமராஜன் காதலித்த நடிகையின் வீட்டார் ஜாதக பொருத்தம் இல்லை எனக் கூறி ராமராஜனுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

ஜாதகம், கடவுள் போன்றவற்றில் கடவுள் போன்றவற்றில் அதிக நம்பிக்கை கொண்ட ராமராஜன் அதனை ஏற்றுக்கொண்டு எந்த பிரச்சினையும் செய்யாமல் விலகிக் கொண்டார்.

அதன் பிறகு நடிகை நளினியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு அருணா, அருண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சமீபத்தில் நடிகை நளினியையும் விவாகரத்து செய்தார் நடிகர் ராமராஜன்.

உங்களுடைய விவாகரத்திற்கு காரணம் என்ன..? என்று நடிகை நளினியுடன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்ட பொழுது அவர் கூறிய தகவல் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

அது என்னவென்றால் ஒரு ஜோதிடர் நீங்கள் இருவரும் பிரிந்து விடுவீர்கள்.. இல்லையென்றால் உங்களில் ஒருவருக்கு பெரிய பிரச்னை வரும் என்று கூறினார். அதற்கேட்டார் போலவே எங்களுக்குள் சண்டை வந்து கொண்டே இருந்தது.. அவர் ஒருமுறை விபத்தில் சிக்கினார்.. எனவே சண்டை பொரிதாகி பிரிவதற்குள் தற்போது பேசி முடிந்துவிடலாம் என்று பேசி புரிந்து விட்டோம் என கூறியிருக்கிறார் நளினி.

தன்னுடைய முதல் காதலை ஜாதக பொருத்தம் சரி இல்லை என்பதால் தவிர்த்து விட்ட நடிகர் ராமராஜன் தன்னுடைய இரண்டாவது மனைவியும் ஜாதகத்தில் சிக்கல் உள்ள காலகட்டம் என்பதால் பிரிந்தார் என்பதுதான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

Continue Reading
Click to comment

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version