Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கணவர் மீது நடிகை ரம்பா வழக்கு..! சாப்பாட்டுக்கே வழி இல்லாத சூழல்..! கனடாவில் அவர் செய்யும் வேலை..!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகையான ரம்பா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்புரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

நடிகை ரம்பா:

குறிப்பாக தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் நடிகை ரம்பா.

இவர் முதன் முதலில் ஸ்கூலில் காம்பிடிஷன் ஒன்றில் நடனம் ஆடிய போது மலையாள திரைப்பட இயக்குனரான ஹரிஹரன் தான் அவரை திரைப்படத்தின் முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தார்.

அவரது இயற்பெயர் விஜயலட்சுமி என்பது பலருக்கும் தெரிந்திடாத உண்மை. மிகவும் இளம் வயதிலேயே 17 18 வயதிலேயே ஹீரோயின் ஆக அறிமுகமானார் நடிகை ரம்பா.

தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் மலையாள படங்களில். வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது.

முதல் தமிழ் படம்:

அதன் பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்க முதன் முதலில் உழவன் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அறிமுகமாகி இருந்தார் ரம்பா.

ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. பின்னர் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்த படம் எது என்றால் உள்ளதை அள்ளித்தா திரைப்படம் தான்.

இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக திரையரங்கங்களை பிச்சி கொண்டு ஓடியது. அதுமட்டுமில்லாமல் ரம்பாவின் ஸ்ட்ரக்சர் ஆன அழகு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுக்க ஒரே படத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் ரம்பா.

இப்படி நட்சத்திர நடிகையாக தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து வந்த ரம்பாவுக்கு தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய புயல் அடிக்க ஆரம்பித்தது.

பொருளாதார ரீதியாக சறுக்கல்:

அதாவது “த்ரீ ரோசஸ்” என்ற ஒரு திரைப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் தயாரிக்க ஆரம்பித்தார் ரம்பா.

இந்த படத்தை நடிகை ரம்பாவின் அண்ணன் ஆன வாசு தான் தயாரித்திருந்தார். படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் பிரபலமாகி பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சிக்கலில் சிக்கினார் ரம்பா.

இதனால் வட்டி கட்ட முடியாமல் தன்னுடைய சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு சென்றார் நடிகை ரம்பா. பெரிதாக அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இதனுடையே அவரது மார்க்கெட் சரிந்தது. பின்னர் புது நடிகைகளின் பரவால் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அந்த சமயத்தில் தான் இலங்கையை சேர்ந்த இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கணவரை விவாரத்து செய்த ரம்பா:

இவர் கனடா நாட்டில் பெரிய தொழிலதிபராக இருந்து வந்தார். திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலானார் நடிகை ரம்பா .

அதன் பின்னர் 2012 இல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து கணவர் மீது அதிரடியான வழக்கு ஒன்றை போடுகிறார்.

தனக்கும் தன்னுடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறி அங்கு தான் மிகுந்த கொடுமைகளை அனுபவிப்பதாகவும் சாப்பாட்டுக்கே வழி இல்லை என்றும் விவாகரத்து செய்யப் போகிறேன் என குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பின்னர் மீண்டும் குடும்பத்தில் இருப்பவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி மீண்டும் வாழ வைத்தார்கள்.

ரம்பா கணவர் செய்யும் தொழில்:

தற்போது இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மீண்டும் கனடாவுக்கு சென்று அங்கு புதிய பங்களா… சொகுசு கார் என வாழ்ந்து வருகிறார் ரம்பா.

நடிகர் ரம்பாவின் கணவர் கன்னட நாட்டில் பல தொழில் செய்து அதில் கோடி கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்.

அந்த பணத்தை அங்குள்ள ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்து ட்ரஸ்ட் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். அதே போல் சென்னையிலும் factory ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version