Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

காட்டுக்குள்ள தான் எங்க ரெண்டு பேருக்கும் அது நடந்தது.. உளறிவிட்டு மழுப்பிய ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் அசராமல் நடித்து என்றும் எவர்கிரீன் நடிகையாக மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு செல்வாக்கை பெற்றிருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் பற்றி அதிக அளவு உங்களுக்கு நன்றாக தெரியும்.

இவர் நடிப்புக்கு கிடைக்காத விருதுகளே இல்லை. அந்த வகையில் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மூன்று நந்தி விருதுகள் மற்றும் தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் பெற்று குவித்து இருக்கிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

ரம்யா கிருஷ்ணன் தனது 14 வது வயதில் திரை பயணத்தை ஆரம்பித்தார். இவர் 1985 ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்து வெளி வந்த வெள்ளை மனசு படத்தில் நடித்த போது எட்டாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார்.

தமிழில் இவர் நடிப்பில் வந்த கேப்டன் பிரபாகரன், அம்மன், படையப்பா போன்ற படங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு இந்திய அளவில் அதிக அளவு ரசிகர்கள் இருப்பதோடு இன்டர்நேஷனல் அளவிலும் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.


2015 ஆம் ஆண்டு வெளி வந்த பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்து அசத்தியவர். இதனை அடுத்து இந்த கேரக்டருக்கு நேர் மாறாக 2019 ஆம் ஆண்டு வந்த தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஆபாச நடிகையாக அதிக அளவு கவர்ச்சியை காட்டி நடித்திருந்தார்.

அம்மன் ரோலாக இருந்தாலும் சரி கவர்ச்சி ரோலாக இருந்தாலும் சரி எல்லா விதமான வேடங்களுக்கும் அருமையாக பொருந்தக்கூடிய உடல் வாகையும், நடிப்புத் திறனையும் ஒருங்கே பெற்ற நடிகை ரம்யா கிருஷ்ணன்.

பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் வெப் சீரிர்களிலும் கலக்கி வரக்கூடிய இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய விஷயமானது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

காட்டுக்குள்ள நடந்த விஷயம்..

அந்த விஷயமானது வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடக்கும் போது கடுமையான வெயில் இருக்கும். வெயில் என்றாலே ரம்யா கிருஷ்ணனுக்கும், நடன இயக்குனர் கலா மாஸ்டருக்கும் சுத்தமாக ஒத்து வராது.


மேலும் வெயில் அதிகமாக இருந்தால் இருவருக்குமே பேதி ஆகிவிடும். ஒரு முறை வெளிநாட்டில் படப்பிடிப்புக்கு சென்று இருந்த போது கழிவறை வசதி கூடு இல்லாத பகுதியில் ஷூட்டிங் நடந்தது.

இந்த சமயத்தில் திடீர் என பேதியானதை அடுத்து காட்டுப்பகுதிகளில் இடத்தை தேடி ஓடி ஒரு வழியாக சமாளித்தோம் என்று பேச்சுவார்த்தையில் ரம்யா கிருஷ்ணன் கூறினார்.

இந்த விஷயத்தை கூறிய அடுத்த சில மணி நேரங்களிலேயே இதை வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் வீடியோவில் கட் செய்து விடுங்கள். லூஸ் மோஷன் போன்ற விஷயங்கள் எல்லாம் பேசினால் நன்றாக இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே வீடியோவாக வெளியிடும்போது கட் செய்து விடுங்கள் என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.


அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் கவலைப்படாதீங்க மேடம்.. நீங்கள் லூஸ் மோஷன் பற்றி சொன்ன விஷயத்தை நாங்கள் ஸ்லோ மோஷனில் போட்டு காட்டுவோம் என குபீர் கிளப்பினார்.

அப்படி குபீர் கிளப்பிய தொகுப்பாளர் வேறு யாருமில்லை கே பி ஒய் பாலா தான். இவர் தான் டைமிங்கில் ரைமிங்காக பேச அனைவரையும் கலகலப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

Continue Reading
Click to comment

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version