ரம்யா பாண்டியன் ( Ramya Pandian ) ரசிகர்களுக்கு பரிச்சயமான திரைப்பட நடிகை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மக்கள் மத்தியில் பிரபலமானார்.கடந்த 2015ம் ஆண்டில் வெளிவந்த ஜோக்கர் படத்தில், ரம்யா பாண்டியன் நடித்திருந்தார்.
சோமசுந்தரம் ஹீரோவாக நடித்த இந்த படத்தில், மில் தொழிலாளியாக ரம்யா பாண்டியன், வெகு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கிராமத்து பெண்ணாக ஒரு வசதியற்ற வீட்டில், கழிப்பிட வசதியின்றி தவிக்கும் பெண்ணாக, மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அடுத்து, சமுத்திரக்கனியின் ஆண்தேவதை படத்தில், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணாக, 2 குழந்தைகளுக்கு தயாயாக நடித்திருந்தார். இரண்டு படங்களில் நடித்தும், ரம்யா பாண்டியன் பெரிய அளவில், ரசிகர்களிடம் ரீச் ஆகவில்லை. ஆனால், இந்த படங்களில் அவர் மிகச் சிறந்த நடிப்பை தந்திருந்தார்.
Ramya Pandianரம்யா பாண்டியன், 2019 ம்ஆண்டில் விஜய் டிவியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இறுதிச்சுற்றில் மூன்றாமிடம் பிடித்தார். சமையல் போட்டியாளராக பங்கேற்ற இவருடன், புகழ் செய்யும் காமெடி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
புகழ் அடிக்கடி ரம்யாபாண்டியன் வந்து கலாட்டா செய்து கலாய்ப்பதும், பலத்த உற்சாகத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில், ரம்யா பாண்டியனை, புகழுடன் இணைத்து கலாய்ப்பும் அதிகரித்தது.
Ramya Pandianஇருவரும் காதலிப்பதாக கூட, ஒரு வதந்தி பரவியது. ஆனால், இதுவரை இருவரும் நல்ல நண்பர்களாகவே, தங்களது நட்பை தொடர்கின்றனர். அத்துடன், புகழ் சினிமாவில் வளர்ந்துவரும் ஒரு காமெடி நடிகராக, படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வந்த ஆகஸ்ட் 16, 1947 படத்தில் புகழ் நடித்திருக்கிறார்.
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ல் ரம்யா பாண்டியன் பங்கேற்றார். இதில், பார்வையாளர்களின் அமோக ஆதரவால் 4வது இடம் பெற்றார். இவரது சித்தப்பா நடிகர் அருண்பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநர் ெஷல்லியிடம் மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் ரம்யா பாண்டியன் பணியாற்றினார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார்.
Ramya Pandianரம்யா பாண்டியன் அழகான, இளம் நடிகையாக இருந்தும், நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்தியும் அவருக்கு தமிழ் சினிமாவில் போதிய வரவேற்பு இல்லை. இதையடுத்து, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக உள்ள ரம்யா பாண்டியன், பட வாய்ப்புகளுக்காக கிளாமர் புரட்சியில் இறங்கி விட்டார்.
இதையடுத்து, விதவிதமான ஆடைகளில், புதிய கெட் அப்புகளில் கவர்ச்சி படங்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார். இதை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை தெறிக்க விடுகின்றனர். இப்போது, கருப்பு மாடர்ன் டிரஸ்சில் கழுத்தின் கீழ் பகுதி தாராளமாக பளீர் எனத் தெரியும் விதமாக, அம்மணி கிளாமரில் அசத்தி இருக்கிறார்.
Ramya Pandianரம்யா பாண்டியனின் வயது 35 கடந்த நிலையில், இனியும் சினிமா வாய்ப்புகள் தொடருமா அல்லது, டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருமா என்ற வினாக்களுக்கு போகப் போக பதில் தெரியும்.
எனினும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கு, தமிழ் சினிமாவில் வாய்ப்பு மிக மிக குறைவுதான் என்பதை, ரம்யா பாண்டியனின் நிலையும் உறுதிபடுத்தி இருக்கிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.