ரஞ்சிதா-வுக்கும்.. நித்தியானந்தா-வுக்கும் இப்படித்தான் தொடர்பு ஏற்பட்டதாம்.. – புதுசா இருக்கே..!

கண்ணா.. என் சேலைக்குள்ள.. கட்டெறும்பு புகுந்துருக்கு.. எதுக்கு.. என கேள்வி கேட்டு பாடலைப் பாடிய நாளிலிருந்து நடிகை ரஞ்சிதா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமான காட்டிலும் பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் இவர் இருக்கும் வீடியோ ஒன்று வெளியான பிறகு தென்னிந்தியா முழுதும் பிரபலமானார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் எப்படி நான் நித்யானந்தாவுடன் அறிமுகமானார் என்பது குறித்த தகவல்களை பதிவு செய்திருக்கிறார் நடிகை ரஞ்சிதா. அவர் கூறியதாவது, நான் எப்படி இருக்கிறேனோ எனக்கு அப்படியே மாறுபட்டவர் என்னுடைய கணவர். நான் பேசிக்கொண்டே இருப்பேன் அவர் பேசவே மாட்டார்.

மிகவும் பேலன்ஸ்டாக இருப்பார் சமநிலையுடன் இருப்பார் நான் வாழ்க்கையில் பார்த்த ஒரே சமநிலையான மனிதர் அவர் மட்டும்தான். என்ன திட்டினாலும், அது நான் என்று மட்டுமல்ல.. வெளியில் வேலை பார்த்த எந்த டென்ஷன் வந்தாலும் கூட  அவர் ஒரே மாதிரி தான் இருப்பார்.

அவர் டென்ஷனாக இருக்கிறாரா..? சந்தோஷமாக இருக்கிறாரா..? என்று நமக்கு தெரியாது. நிறைய முறை அவரிடம் நான் கேட்டிருக்கிறேன் இவ்வளவு நடந்திருக்கிறது நீங்கள் எதுக்குமே பீல் பண்ண மாட்டீங்களா..? ஏன் இப்படி இருக்கீங்க.. என்று நான் கேட்டிருக்கிறேன்.

அப்போது அது நடந்துட்டு இருக்கட்டும்.. அதற்கெல்லாம் நான் பீல் பண்ணிட்டு இருக்க முடியுமா..? என்று கேஷுவலாக கூறுவார். அவருடைய அலுவலகத்தில் எது நடந்தாலும் அதனை வீட்டில் வெளிப்படுத்த மாட்டார். நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன். அலுவலகத்தில் உள்ள பிரச்சினைகளை வீட்டில் காட்டுவார்கள்.

அந்த மன அழுத்தத்தை வீட்டில் இறக்கி வைத்து விடுவார்கள். இதனால் வீட்டில் இருப்பது மன அழுத்தம் அதிகரிக்கும்.. சண்டை போடுவார்கள். இப்படியான பிரச்சனைகள் இருக்கும். அவருடைய நண்பர்கள் அல்லது நான் எங்காவது சோசியல் பார்ட்டிகளுக்கு சென்றால் மட்டும் தான் அவருக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை தெரியும்.

அந்த அளவுக்கு இருப்பார்.. மனரீதியாக வலிமையானவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். பல இடங்களில் உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறேன்.. சின்ன சின்ன விஷயங்கள் கூட கோபப்படுவேன்.. டென்ஷன் ஆவேன்.. ஆனால் அவர் எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சாதாரணமாகவே இருப்பார் என்று கூறியிருக்கிறார் நடிகை ரஞ்சிதா.

ஒரு கட்டத்தில் அடிக்கடி கோபப்படுகிறேன் என மன அமைதி வேண்டி நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு சென்று அப்படித்தான் எனக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள தொடர்பு உருவானது. அவருடைய ஆன்மிக வகுப்புகளில் என்னுடைய மனம் லயித்தது என்னை நான் அமைதியாக உணர்ந்தேன். எது நமக்கு பிடிக்குமோ அதை செய்ய வேண்டும் அதுவே நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக இருப்பதற்கு மகிழ்ச்சியாக கடப்பதற்கும் இது உதவும் என்று கூறியிருக்கிறார் நடிகை ரஞ்சிதா.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …