நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் நடித்த இரண்டாவது திரைப்படம் ஆன வாரிசு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. கலையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்திருக்கிறத வாரிசு திரைப்படம்.
காரணம் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு வாரம் 80 சதவீத Occupancy-உடன் ஓடியது. இதனால் வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியானது. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு பதிப்பில் வெளியானாலும் கூட தெலுங்கு பதிவு மூன்று நாட்கள் கழித்து ஜனவரி 14-ஆம் தேதி தான் வெளியானது.
200 கோடிக்கும் அதிகமாக இந்த திரைப்படம் வசூல் இருக்கிறது என்று அதிகாரப்பூர் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.
தமிழில் சுல்தான் என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக அறியப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவிடம் இந்த படத்தில் நடித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது, இந்த படத்தில் எனக்கு நடிக்கும் வேலையே இல்லை என்பதை தெரிந்து கொண்டுதான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
இது ஒரு உணர்வுபூர்வமான தேர்வு. நடிகர் விஜயை எனக்கு அந்த அளவுக்கு பிடிக்கும். சிறுவயதில் அவருடைய படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அப்படி இருக்கும்பொழுது இவருடைய படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றால் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்.
படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி நான் விஜயை சந்தித்து இரண்டு பாடல்களைத் தவிர வேறு வேலையே எனக்கு படத்தில் இல்லை என்று கூறி புலம்பிக்கொண்டே இருந்தேன். இது மனப்பூர்வமான எடுக்கப்பட்ட முடிவு.
விஜயுடன் பணியாற்ற வேண்டும் என்ற விரும்பியதன் காரணமாகத்தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். பொதுவாக விஜய் படங்களில் ஹீரோயினுக்கு வேலையே இருக்காது என்று கூறுவார்கள்.
அது தெரிந்துதான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். மட்டுமில்லாமல் ஒரு மிகப்பெரிய சினிமா நட்சத்திரம் அவருடைய படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்கள் எப்படி வேலை செய்வார்கள் என்பதெல்லாம் பற்றி சிறிய சிறிய விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இது எனக்கு என்னுடைய எதிர்கால சினிமா வாழக்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் நடிகர் விஜயின் படங்களில் ஹீரோயினிக்கு வேலையே இருக்காது என்று நடிகை ராஷ்மிகா கூறி இருப்பது விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது.