தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தன்னா தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் தோல்வியடைந்த காரணத்தினால் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய ஓப்பனிங் கிடைக்கவில்லை.
ஆனால் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் போடப்பட்ட படத்திற்கான பூஜையில் நடிகர் விஜயை கொஞ்சி குலாவிய ராஷ்மிகா மந்தன்னாவின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அந்த அளவிற்கு நடிகர் விஜயின் தீவிர ரசிகையாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடிப்பேன் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை என்று ஒரு பேட்டியில் பதிவு செய்துள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ராஷ்மிகா மந்தன்னா. அந்த ஒரே ஒரு படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார்.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் இவர் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைந்தால் பாலிவுட்டில் நடிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இந்த கிளாமர் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்பது போல தன் பார்வையை வீசி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.