ராஷ்மிகா மந்தன்னா பற்றி சில அழுக்கான உண்மைகள்..! – பலரும் அறிந்திடாத தகவல்..!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்களைப் பற்றிய ரகசியங்கள் அடங்கிய கருப்பு பக்கங்கள் என்பது இயல்பாக இருக்கும். ஆனால், பிரபலங்களுடைய கருப்பு பக்கங்கள் என்று கூறும் பொழுது அவை மீடியாவில் பேசப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.

அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தன்னா பற்றி பலரும் தகவல்கள் சிலவற்றை சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில், கன்னட சினிமா உலகினருக்கும் நடிகர் ராஷ்மிகா மந்தன்னாக்கும் இடையே நடந்துவரும் பனிப்போரை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அது குறித்த பல தகவல்களை பார்த்திருப்பீர்கள். குறிப்பாக காந்தாரா படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் ரிஷப் ஷெட்டி நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து கூறியிருந்த சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி ஒட்டுமொத்த திரையுலகங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அப்படி என்னதான் ராஷ்மிகா மந்தனாவுக்கும் கன்னட சினிமாவுக்கும் பகை என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதில் தான், நடிகை ராஷ்மிகா மந்தன்னா குறித்த கன்றாவியான உண்மைகள் புதைந்திருக்கின்றன.

நிச்சயம் முடிந்த நிலையில் திருமணம் ரத்து…

ஒருவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவரை காதலித்து.. நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அற்ப காரணங்களுக்காக அந்த திருமணத்தை நிறுத்தி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தன்னா.

கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில்தான் நடிகை ராஷ்மிகா மந்தன்னா முதன்முதலாக ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஒரே திரைப்படம் இந்த ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியா சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் சுண்டி இழுத்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

நடிகை ராஷ்மிகா மந்தனா முதன் முதலில் அறிமுகமான கிரிக் பார்ட்டி திரைப்படத்தை தயாரித்தவர் கன்னட தயாரிப்பாளர் ரக்ஷித் செட்டி. இவருடன் காதல் வயப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தன்னா அவரை திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார்.

நிச்சயதார்த்த முறை இந்த நிலையில் திருமணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்த நிலையில் அடுத்தடுத்து நான் சினிமாவில் நடிக்க வேண்டும் இப்போது நான் சினிமா திருமணம் செய்து கொள்ள செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

விஜய் தேவார கொண்டாவுடன் காதல்..

மேலும், ராஷ்மிகா மந்தன்னா இந்த திருமணத்தை நிறுத்தியதற்கு இன்னொரு காரணமும் இணையத்தில் வட்டமடிக்கிறது. அதற்கு ஆதாரபூர்வமாக சில புகைப்படங்களையும் கூட ராஷ்மிகா மந்தன்னாவே வெளியிட்டு இருக்கிறார்.

இவர் விஜய் தேவாரகொண்டவுடன் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்த போது அவருடனும் காதல் வயப்பட்டு இருக்கிறார் என்றும் இதனால் தான் தன்னுடைய நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தன்னுடைய திருமணத்தை நிறுத்திவிட்டார் என்றும் கூறினார்கள்.

விஜய் தேவாரகொண்டாவும் காதலித்து வருகிறார்கள். ஆனால், இருவரும் இதனை வெளியில் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்று கிசுகிசுக்கள் பரவி வருகிறது. இதனை நிரூபிக்கும் விதமாக நடிகை ராஷ்மிகா மந்தன்னா மாலத்தீவில் நீச்சல் குளத்தில் இருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருந்தார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆனால் அதே நீச்சல் குளத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா இருந்தபடி தன்னுடைய தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஆக இருவரும் ஒரே நீச்சல் குளத்தில் தான் இருக்கிறார்கள் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள் என்பது ஊர்ஜிதம் ஆகிறது. இத்தனைக்கும் இருவரும் புதிதாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

எனவே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சி என்று சொல்லி மறுப்பதற்கும் எதுவும் கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் அவருடைய திரை வாழ்க்கை குறித்து கேட்ட பொழுது தமிழ் சினிமாவையும் தெலுங்கு சினிமாவையும் நான் நேசிக்கிறேன் என்று பேசியிருந்தார்.

ராஷ்மிகா பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல..

ஆனால். தன்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய கன்னட சினிமாவை பற்றி இவர் பேச மறுத்து விட்டார். கன்னட சினிமா குறித்து எந்த ஒரு விஷயத்தையும் பேசவில்லை.

இவர் முதல் முதலில் ஹீரோயினாக நடித்த கிரிக் பார்ட்டி திரைப்படத்தை தயாரித்தது கன்னட தயாரிப்பாளர் ரக்ஷித் செட்டி. இவருடன் தான் நிச்சய தார்த்தம் செய்து கொண்டு சில தினங்களில் திருமணத்தை நிறுத்தினார்.

இந்நிலையில், காந்தாரா பட நடிகரிடம் ராஷ்மிகா மந்தனா, சமந்தா, சாய்பல்லவி.. இவற்றில் யாருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவீர்கள் என்று ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பிய போது சாய்பல்லவி சிறப்பான நடிகை.. சமந்தா விரைவில் குணமாகி திரும்ப வேண்டும் என்று கூறிய அவர் ராஷ்மிகா மந்தனா குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்று பதிவு செய்திருந்தார்.

இந்த கிரிக் பார்ட்டி திரைப்படத்தை ரக்ஷித் ஷெட்டியுடன் இணைந்து தயாரித்து, இயக்கியது வேறு யாருமல்ல.. காந்தாரா படத்தின் ஹீரோவும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி தான்.

தமிழ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராஸ்மிகாவின் அழுக்கான இந்த உண்மைகளை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைட் போஸில் நச் போஸ்..! கிக்கு ஏற்றும் வேதிகா.. அட.. ஒரு வாரம் தாங்கும்!!..

ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைட் போஸில் நச் போஸ்..! கிக்கு ஏற்றும் வேதிகா.. அட.. ஒரு வாரம் தாங்கும்!!..

தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை வேதிகா 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த மதராசி என்ற திரைப்படத்தின் …

Exit mobile version