இத்தனை கோடி கொடுத்தால் தான் நடிப்பேன்.. ராஷ்மிகா மந்தனா-வுக்கு ஆப்பு வைத்த படக்குழு..!

தென்னிந்திய திரை உலகில் தற்போது அதிக அளவு சம்பளம் வாங்கும் நடிகைகளின் வரிசையில் ராஷ்மிகா மந்தனா ஒருவராக இருக்கிறார். மேலும் இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒரு கோடி முதல் 2 கோடி வரை இதுவரை சம்பளமாக பெற்று வந்தார்.

 இதனை அடுத்து இவர் தற்போது தளபதி விஜய்யோடு இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருப்பதால் இவர் மார்க்கெட் எகிறி விட்டது என்று நினைத்துக் கொண்டு இனிமேல் நடிக்கக் கூடிய படங்களுக்கு மூன்று கோடிக்கு மேல் சம்பளத்தை  கேட்டதை அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இவரை ஓரம் கட்டி விட்டதாக தகவல்கள் வந்துள்ளது.

தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணின் ஆர்.சி 15 திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் சங்கர் சுமார் 170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி வரக்கூடிய நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

 அடுத்து இரண்டாவது ஹீரோயினியாக இந்த படத்தில் நடிப்பதற்காக ராஷ்மிகாவை அணுகிய சங்கர் படத்தின் கதையை கூறி இருக்கிறார். அதைக் கேட்டு படத்திற்கு ஓகே சொன்ன ராஷ்மிகா தனது சம்பளத்தை மூன்று கோடி அளவு தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

 இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த சங்கர் இந்த படத்தில் பாலிவுட் நடிகைகே வெறும் 4 கோடி ரூபாய் தான் சம்பளம் தருகிறேன்.

வெறும் தென்னிந்திய மொழிகளில் நடித்துவிட்டு மூன்று கோடிக்கு கேட்பது அநியாயம் என்று கோபத்தை  காட்டி இருக்கிறார்.

 மேலும் இந்தப் படத்தில் ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்வதை தவிர்த்து விட்டு வேறு நடிகைகள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று இயக்குனர் சங்கர் விலகிவிட்டார்.

 இதை அறிந்த திரை உலக வட்டாரங்கள் இவர் செய்திருப்பது மாபெரும் தவறு என்பதை விரைவில் உணர்ந்து கொள்வார் என்று கூறி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version