தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா அழகாக இருப்பது எப்படி என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நடிகர் ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
இவருடைய அழகு மற்றும் நடிப்பு இரண்டும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை ஓப்பனிங் செய்து கொடுத்தது.
விஜய் தேவார கொண்டவுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த படத்தினால் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ரசிகர்களாக மாறினார்கள். அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் கூட ராஷ்மிகா மந்தனாவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கிக் கொண்டே இருந்தது.
சமீபத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கில் கொடி கட்டி பறந்து நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழும் தற்போது தன்னுடைய மார்க்கெட்டை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்று காத்துக் கொண்டிருந்தார் அம்மணி.
ஆனால் வாரிசு திரைப்படம் கலைவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இவருக்கு தற்போது, ஹிந்தியிலும் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.,
இந்நிலையில், அழகாக இருப்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அவர் கூறியதாவது, அழகுக்கு உதாரணம் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.
எல்லோரிடமும் அழகு இருக்கின்றது. மற்றவர்களுக்காக நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கண்ணாடியின் முன்பு நின்று பார்க்கும் பொழுது ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதும். நீங்களும் அழகானவர் தான்.
உடல் பருமனாக இருந்தால் தான் சிலர் அழகாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எதற்காகவும் தங்களுடைய உடல் வடிவத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது. ஆறு மாதங்கள் உடற்பயிற்சி செய்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
எனக்கு நான் ஒரு நல்ல உடற்பயிற்சியாதரை நியமித்திருக்கிறேன். அவரது ஆலோசனைகளை தான் நான் கடைபிடித்து வருகிறேன்.இதனால் என்னை கட்டுக்கோப்பான தோற்றத்தில் வைத்து கொண்டிருக்கிறேன். சினிமா நடிகைகளுக்கு முக்கியமான தேவையே அவர்களுடைய உடல் தோற்றம் தான்.
எனவே அதனை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். எனவே என்னுடைய பயிற்சியாளரின் ஆலோசனைகளுடன் என்னுடைய உடல் தோற்றத்தை காப்பாற்றி வருகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இவருடைய இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா-வின் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.