தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் வரிசையில் ஒருவராக இருக்கக்கூடிய ராஷ்மிகா மந்தானா தற்போது தனது நடிப்பில் வெளிவந்திருக்கும் தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தை தியேட்டரில் சென்று பார்த்திருக்கிறார்.
பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு இருக்கக்கூடிய இந்த திரைப்படத்தை வம்சி இயக்கி இருக்கிறார். மேலும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜ் தயாரித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு வெர்சனிலும் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சரத்குமார் பிரகாஷ்ராஜ் எஸ்.ஜே சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இதனை அடுத்தது தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தை பார்த்து வரக்கூடிய நிலையில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்வான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
என்ன நிலையில் இந்த படத்தை பார்க்க லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்கள் வந்து சென்றார்கள், இந்த படத்தின் இசை அமைப்பாளரான தமன் படத்தை பார்த்துவிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தது அனைவரையும் புல்லரிக்க வைத்தது.
இதனை அடுத்து இந்த படத்தை தற்போது எந்த படத்தில் ஹீரோயினியாக நடித்த ராஸ்மிகா மந்தானா பார்த்து விட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்து விஜய் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சிகள் தற்போது ராஷ்மிகாவையும் கொண்டாடி வருகிறார்கள்.
ஒரு சாதாரண ரசிகை போல விஜய்யின் படத்தை விரும்பி பார்த்து இருக்கும் இவரது எந்த வீடியோ தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
வரும் நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் குடும்பப் பாங்கான இந்த படத்தை பார்க்க குடும்பத்தோடு தமிழகத்து மக்கள் அனைவரும் படையெடுத்து விஜய்யின் இந்த படத்தை வெற்றி அடைய செய்வதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை இந்த படம் புரியும் என்று அவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.