இறக்கும் வரை அது நடக்க கூடாது.. என்ற ஒரே காரணத்தினால் திருமணம் செய்யாத நடிகை..!

இறக்கும் வரை அது நடக்க கூடாது.. என்ற ஒரே காரணத்தினால் திருமணம் செய்யாத நடிகை..!

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக 1990களில் வெளிவந்த படம் புதுவசந்தம். இந்த படத்தில், கௌரி என்ற கேரக்டரில் நடித்திருப்பார் சித்தாரா.

அடுத்து புதுப்புது அர்த்தங்கள், மாமியார் வீடு, சின்னதுரை, நட்புக்காக, என்றும் அன்புடன், உன்னைச் சொல்லி குற்றமில்லை, அர்ச்சனா ஐஏஎஸ் என பல படங்களில் சித்தாரா நடித்திருந்தார்.

புரியாத புதிர் படத்திலும் சித்தாரா நடித்திருப்பார். அதே போன்று சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நாகேஷ் திரையரங்கம் என்ற படத்திலும் சித்தாரா நடித்திருந்தார்.

Sithara

மிக விரைவில், நடிகர் வடிவேலுவுக்கு ஒரு படத்தில் சித்தாரா ஜோடியாக நடிப்பதாக சில தினங்களுக்கு முன் தகவல் ஒன்று வெளியானது.

சித்தாரா..

நடிகை சித்தாரா குறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நல்ல அழகான நடிகை. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர்.

தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். பார்ப்பதற்கு மிக லட்சணமாக அழகாக இருப்பார்.

அவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. நான் முனிவராகி விட்டேன். முனிவர் ஒருவருக்கு பக்தை ஆகிட்டேன் என்று சொல்லிக்கொண்டு வெண்மை நிற புடவை கட்டிக்கொண்டு துறவி மாதிரியே கொஞ்ச காலம் இருந்தார் சித்தாரா.

Sithara

அதன்பிறகு எனக்கு திருமணம் செய்துக் கொள்ளவே உடன்பாடு இல்லை. நான் கன்னியாகவே இருக்க விரும்புகிறேன் என்று சொன்னவர் இதுவரை திருமணம் செய்யாமல் இருக்கிறார் நடிகை சித்தாரா.

இறக்கும் வரை கன்னித்தன்மை..

இறக்கும் வரை கன்னித்தன்மை இழக்கக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காக இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் நடிகை சித்தாரா என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Sithara