ரேபா மோனிகா ஜான் (Reba Monica John) பிகில் படத்தில் நடித்து, ரசிகர்களிடம் அறிமுகமானார். தமிழ், மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இவர், மாடலிங் துறையில் இருந்தவர்.இவர் மலையாள குடும்பத்தை சேர்ந்தவர்.
பிறந்தது மங்களரூவில், ஜாக்கோ பின்ட் சுவர்க்க ராஜ்ஜியம் என்ற மலையாள படத்தில், அறிமுகமானார். வயது 29 ஐ கடந்தாலும், இன்னும் கல்லூரி மாணவி போலவே தோற்றமளிக்கிறார். பெங்களூரு, கிறிஸ்ட் பல்கலை., யில் எம்எஸ்சி பட்டம் பயின்றவர். பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.
பைப்பிள் சுவத்திலே பிராணயாமம், மைக்கேல், தடவியல் ஆகிய மலையாள படங்களிலும், ஜருகண்டி, பிகில், தனுசு ராசி நேயர்களே, மழையில் நனைகிறேன், எப் ஐ ஆர் ஆகிய தமிழ் படங்களிலும், சகலகலா வல்லபா என்ற கன்னட மொழி படத்திலும் நடித்திருக்கிறார்.
நிறைய படங்களில் நடித்திருந்தாலும், ரேபா மோனிகா ஜானுக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது பிகில் படம்தான். அட்லி இயக்கத்தில், விஜய் – நயன்தாரா நடித்த இந்த படம், பெண்களின் துணிச்சலை, பெருமையை பறைசாற்றும் படமாக இருந்தது. இதில், காதலனால் முகத்தில் ஆசிட் வீசப்பட்டு, முகம் வெந்துபோன ஒரு கால்பந்து வீராங்கணை கேரக்டரில், ரேபா மோனிகா ஜான் நடித்திருந்தார்.
தனது முகம் சேதமடைந்ததால், வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பெண்ணான இவருக்கு, படத்தின் நாயகன் விஜய், ஆறுதலும் தைரியமும் சொல்லி, கால்பந்தாட்ட இறுதி போட்டிக்கு அழைப்பார்,இதையடுத்து, தனது முகத்தில் ஆசிட் வீசிய காதலனை சந்திக்கும் ரேபா மோனிகா, தன் முகத்தை மறைத்து கட்டியிருந்த துணியை அவிழ்த்து எறிந்துவிட்டு, ‘புட்பால் மேட்ச் பார்த்திருக்கியா? இனிமே பாரு’ என்று சொல்வதை அடுத்து, ‘சிங்கப்பெண்ணே’ பாட்டு, படத்தில் இடம்பெற்று, ரசிகர்களின் கிளாப்ஸ், தியேட்டரில் அதிரும். அதனால், இந்த படத்தில் இவரது நடிப்பும், கேரக்டரும் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் இவர், தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி அப்டேட் செய்து, ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறார். அம்மணி பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு, வாழ்த்துகள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறது.
இப்போது, கடற்கரை ஒரத்தில், பாலத்தின் சுவர் மீது பளீரிடும் தொடைகள் தெரியும்படி கால்களை நீட்டி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அந்த புகைப்படங்களுக்கான கேப்சனில், மூச்சடைக்கக்கூடிய கடற்கரைகள் மற்றும் அழகியல் கபேக்கள் மற்றும் கடைகள் நிறைந்த அழகான தெருக்களுடன்! இந்த அழகை பார்த்து, பார்த்து ரசிக்கிறேன், அதாவது, நீரின் நிறத்தைப் பார்க்கிறீர்களா? இது நிஜத்தில் பத்து மடங்கு பிரமிக்க வைக்கிறது. உண்மையிலேயே பிரமிப்பில் இருக்கிறேன் என்று, குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.