கடந்த 1998ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தவர் நடிகை ரெபேக்கா சந்தோஷ் சந்தோஷ் சீரியல் நடிகை-யான இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சிநேகக்கூடூ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்பொழுது சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஸ்ரீஜித் விஜயன் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனார் நடிகை ரெபேக்கா சந்தோஷ்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொள்ள இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவது வாடிக்கை.
என்னதான் கவர்ச்சி உடை அணிந்தாலும் மோசம் என்று யாரும் சொல்லிவிடாதபடியான ஆடைகள் தான் அணிவார். தற்பொழுது களிவீடு என்ற மலையாள சீரியலில் நடித்து வரும் இவர் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார்.
சினிமாவிலும் ஹீரோயின் ஆகும் ஆசையில் இருக்கிறார் போல தெரிகிறது. எனவே தன்னுடையபுகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்