ரோட்டில் பிச்சை எடுக்கும் பிரபல நடிகர் ராஜசேகர் மனைவி..! தினமும் ஒரு வேளை தான் உணவு..!

சென்னையைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான ராஜசேகர் இது ஒரு பொன் மாலைப் பொழுது என்ற பாடல் வரியின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருப்பார்.

இந்த பாடல் ஆனது பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக ராஜசேகர் நடிப்பில் மிகவும் சிறப்பான முறையில் வெளி வந்தது. இவருக்கு ரசிகர் வட்டாரம் உருவானது என்று சொன்னால் மிகையாகாது.

ரோட்டில் பிச்சை எடுக்கும் பிரபல நடிகர் ராஜசேகர் மனைவி..

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராக விளங்கிய ராஜசேகர் ராபர்ட் என்பவரோடு இணைந்து மனசுக்குள் மத்தாப்பு, சின்ன பூவே மெல்ல பேசு, தூரம் அதிகம் இல்லை, பறவைகள் பலவிதம், துரத்தும் பச்சை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

திரைப்படங்கள் மட்டுமல்லாது அன்று சீரியல்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் இவர் பல சீரியல்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தவர்.

---- Advertisement ----

குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் இவரது கதாபாத்திரம் ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டதோடு சின்னத்திரை சங்கங்கத்தில் சில பொறுப்பில் இருந்தவர் ராஜசேகர்.

இதனை அடுத்து உடல் நலத்தால் பாதிக்கப்பட்ட இவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை அடுத்து இவரது மனைவி தாரா தற்போது அளித்திருக்கும் பேட்டி அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

இந்த பேட்டியின் போது அவர் நடுரோட்டில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக சொல்லி இருப்பதோடு தனது கணவர் இறப்பதற்கு முன்பு வடபழனியில் லோன் போட்டு ஒரு பிளாக் வாங்கி இருந்ததாகவும் தற்போது அவர் இல்லாத நிலையில் வீட்டுக் கடனை கட்ட சொல்லி நெருக்கடிகள் வந்துள்ளதாக சொல்லி இருக்கிறார்.

அத்தோடு வேலையில்லாமல் கடனை கட்ட வழியில்லாமல் பரிதவித்து வரக்கூடிய தாரா லோன் போட்டு வாங்கின வீட்டில் ஒரு நாள் கூட வசிக்க கொடுக்க கொடுத்து வைக்கவில்லை என்று குமுறி இருக்கிறார்.

அது அல்லாமல் கிரகப்பிரவேசம் பண்ணி முடிப்பதற்குள்ளே தன் கணவர் இறந்துவிட்டார் மருத்துவ செலவுக்கு கூட பலரிடம் கையேந்திய நிலையில் எப்படி லோனை கட்டுவது என்ற கேள்வியையும் எழுப்பினார்.

தினமும் ஒருவேளை தான் உணவு..

மேலும் சொந்த பந்தங்கள் அவர் இருந்த போது உதவி செய்யவில்லை. எனினும் நான் சினிமா சீரியல் என இருக்கும் பல இயக்குனர்களிடமும் சங்கத்திடமும் டிவி நடிகர் சங்கத்திடமும் போய் ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று கேட்டேன் எங்கேயும் எனக்கு இதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

அது மட்டுமல்லாமல் ஒருவேளை உணவிற்கே தற்போது சிரமப்பட்டு வருவதாகவும் 10 நாள் கூட பட்டினியோடு இருந்ததாகவும் சொல்லியிருக்கக்கூடிய இவர் கடனை வாங்கி வச்சிட்டு போனா யார் கட்டுவாங்க என்று சிலர் சாதாரணமாக தன்னிடம் கேட்டார்கள் என்பதையும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் அவர் வாங்கிய வீட்டைக்கு பணம் கட்ட வழியில்லாத காரணத்தால் என் கணவர் கடைசியா நடிச்ச சத்யா சீரியல் தயாரிப்பாளருக்கு வாடகைக்கு விட்டிருப்பதாக சொல்லிவிட்டார்.

பரபரப்பான பேட்டியால் ஷாக்கில் ரசிகர்கள்..

இந்நிலையில் விஷால் முதல் பல பேரிடம் உதவியை கேட்டும் உதவி கிடைக்காத நிலையில் இந்த பேட்டியை பார்த்தாவது எவரேனும் தனக்கு உதவி செய்ய மாட்டார்களா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

எனக்கு குழந்தை இல்லாத காரணத்தாலும் தன்னை பார்க்க யாரும் இல்லாத நிலையிலும் இவர் தற்போது கொடுத்திருக்கும் பேட்டியின் மூலம் யாராவது உதவி செய்வார்கள் என்ற எண்ணத்தில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி விட்டார்கள்.

---- Advertisement ----