ரோகிணி : தமிழ் சினிமாவில் தற்பொழுது வரை எத்தனையோ வில்லன்கள் வந்து போய் கொண்டு இருந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தில் தோன்றிய மார்க் ஆண்டனியின் வில்லத்தனத்திற்கு ஈடாக முடியாது என்று சொல்லும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சில நடிகர்கள் மட்டுமே காலம் கடந்தும் மக்களால் நிறைவு கூறப்படுகிறார்கள். அந்த வகையில், நடிகர் ரகுவரன் மிகவும் முக்கியமான ஒருவர் எத்தனையோ வில்லு நடிகர்கள் தோன்றினாலும் கூட நடிகர் ரகுவரன் போன்ற ஒரு வில்லன் நடிகர் இனிமேல் பார்க்க முடியாது என்று கூறும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கடந்த 2008 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவி கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து தற்பொழுது சில ரகசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த மீடியா உலகில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு எங்கே எது நடந்தாலும் அதற்கு நாம் ரியாக்ட் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் நான் என்னுடைய முன்னாள் கணவர் ரகுவரன் இறந்த பொழுது என்னுடைய மகனை அழைத்துக் கொண்டு பார்ப்பதற்காக சென்றேன்.
ஒரு சிறுவனை சுற்றி மீடியா நிற்பது எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை கொடுக்கும். அதனால் பத்திரிகையாளர்களை என் மகனை சுற்றி நிற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன்.
ஆனால் அவர்கள் அதை கேட்பதாக இல்லை ரகு இறந்த பொழுது என்னுடைய குடும்பத்துக்கே அங்க பிரைவசி என்ற ஒரு விஷயமே இல்லாமல் போய்விட்டது.
இதன் காரணமாகவே என்னுடைய மகன் ரிஷி தற்போதும் கூட கேமராவில் தோன்ற தயங்குகிறான். இந்தியாவில் நான் உன்னுடன் எங்கேயும் வெளியே வர மாட்டேன் உடனே என்னை புகைப்படம் எடுத்து போட்டு விடுகிறார்கள் என்று கூறுகிறான்.
இது எல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் தன்னுடைய மகன் தன்னிடம் கூறுவதாக நடிகை ரோகிணி கூறியிருக்கிறார். தற்போதும் கூட படங்களில் நடித்து வரும் ரோகிணி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார்.
தொலைக்காட்சி சீரியல்களிலும் பணியாற்றி வரும் இவர் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் பலவந்த ரகுவரனை காதலித்து கடந்த 1996 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரோகிணி.
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்ற நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு இருவர் குழு மேற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக கணவரை விவாகரத்து செய்தார் நடிகை ரோகிணி.
சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ரோகிணி பெண்கள் பாதுகாப்பு குறித்த சில விஷயங்களை பேசி இருக்கிறார். மற்றும் குடும்ப வன்முறை குறித்தும் சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.
அதில் பேசிய நடிகை ரோகிணி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேசிய போது குடும்ப வன்முறை இன்னமும் இருந்து வருகிறது. சில பெண்கள் தான் முற்போக்கான குடும்பங்களில் வாழ்கிறார்கள்.
மீதமுள்ள 90 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த குடும்ப வன்முறையை நானும் அனுபவித்து இருக்கிறேன். அவருடைய குடும்பத்தை விட்டு வெளியே வந்தேன் என்றும் கூறியிருக்கிறார்.
எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் இனிமேல் அங்கு வாழ முடியாது என்ற சூழ்நிலையில் தான் விவாகரத்து முடிவை எடுத்ததாக நடிகை ரோகிணி தெரிவித்திருக்கிறார்.
குடும்பத்தின் மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இத்தனை வருடங்களாக இது பற்றி நான் சொல்லாமல் இருந்தேன் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கக்கூடிய எனக்கே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்றால் எந்த வேலைக்கும் சொல்லாமல் குடும்பத்தில் குடும்பத் தலைவியாக மட்டுமே இருக்கும் பெண்களின் நிலைமையை யோசித்துப் பார்க்க வேண்டும்.
நடிகர் என்னுடைய கணவர் ரகுவரனால் மகனை பார்த்துக் கொள்ள முடியாது என்று தெரிந்தாலும் கூட எனக்கு அந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பதாலுமே ரகுவரனை பிரிந்ததாக கூறியிருக்கிறார்.
விவாகரத்து பெற்று கிட்டதட்ட 18 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் தற்போது இதனை பதிவு செய்திருக்கிறார் நடிகை ரோகிணி என்பது குறிப்பிடத்தக்கது.