நடிகை சாய் பல்லவி ஆரம்பகால முதல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய தனக்கு அடையாளம் கொடுக்கும் என்று நம்பக்கூடிய கதாபாத்திரங்கள் இருக்க திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதனை சாய் பல்லவியின் திரைப்பயணத்தை கவனிப்பவர்களுக்கு இது நன்றாக தெரிந்திருக்கும். தென்னிந்திய படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் சங்க காலமாக அதிகமாக வந்து கொண்டிருக்கின்றது.
அதனை ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் என்று தனித்துவமான ஒரு அடையாளத்தோடு தயாரித்து வருகிறார்கள். இப்படியான படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் முனைப்பு காட்டுகிறார்கள்.
ஹீரோ இருந்தால் தான் படம் வெற்றி பெறும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஹீரோயினை மட்டுமே வைத்து படத்தை வெற்றி படமாக்க முடியும் என்று பல இயக்குனர்கள் சாதித்து இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு நாளைக்கு சாய்பல்லவி இடம் ஒரு திரைப்படத்தில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறீர்களே.
இந்த திறமை உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டபோது அதற்குரிய சாய் பல்லவி நான் நடிப்பை எங்கும் தனியாக கற்றுக் கொள்ளவில்லை ஒரு வேலை அதுவே என்னுடைய பிளஸ் பாயிண்டாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
நான் வீட்டில் எப்படி இருக்கிறேன் சாதாரணமாக எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் திரையிலும் காட்சியளிக்கிறேன் எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அப்படியே நடிக்கிறேன்.
ஆனால் விமர்சனங்கள் வரும் பொழுது சாய் பல்லவி அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். சாய்பல்லவி சாதித்து விட்டார்.. மிரட்டிவிட்டார்.. என்றெல்லாம் எழுதுகிறார்கள்.
இப்படி சொல்லும் பொழுது என் அம்மாவுக்கும் புரிவதில்லை எனக்குமே புரிவதில்லை. அப்படி என்னதான் நீ செய்தாய் என்று எங்க அம்மாவே என்னிடம் கேட்பார் நீ வீட்டில் எப்படி இருக்கிறாயோ.. அதே போல தான் நடித்திருக்கிறாய்… என சொல்லி ஆச்சரியப்படுவார்கள்.
எனவே, சினிமாவில் ஜெயிப்பதற்கு ஒருவர் மீது இருக்கும் கவர்ச்சி காரணமாக இருக்க முடியாது புதுமுக நடிகர்கள் கூட திரைப்படங்கள் நடிக்கிறார்கள். அவர்கள் நடித்த படமும் வெற்றிகளை பெறுகின்றது. எனவே கவர்ச்சியான ஹீரோயின் கவர்ச்சியான ஹீரோ இருந்தால் தான் படம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி.