கோடி ரூபாய் கொடுத்தாலும் குறிப்பிட்ட நடிகருடன் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. சமீப காலமாக, தாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய கதாநாயகிகளை சுற்றி பின்னப்பட்டிருக்கக் கூடிய கதைகளை தேர்வு செய்து தன்னுடைய நடிப்பு திறமையை ரசிகர்களுக்கு காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி.
அழகான முகம்.. வாட்டசாட்டமான தோற்றம்.. என ரசிகர்களின் விருப்பமான நடிகையாக இருக்கும் நடிகை சாய் பல்லவி கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார்.
படுக்கை அறை காட்சிகள் முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவார கொண்டாவுடன் எந்த சூழ்நிலையிலும் நான் நடிக்க மாட்டேன் கோடி ரூபாய் கொடுத்தாலும் அவர்கள் நடிக்க மாட்டேன் என்று நடிகை சாய் பல்லவி அறிவித்திருப்பது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வருகிறார் விஜய் தேவார கொண்டா. ஆனால் அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று வளர்ந்து வரும் நடிகை சாய் பல்லவி அறிவித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் தேடி வருகிறார்கள். சமீபத்தில், தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என மூன்று மொழிகளிலும் தயாரான லைகர் திரைப்படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார் நடிகர் விஜய் தேவார கொண்டா.
இந்த படத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் பெறும் நடிகராகவும் உயர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட நடிகருடன் நடிகை சாய்பல்லவி நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாரே என்ற விஷயம்.. ரசிகர்களை பரபரப்பாகி இருக்கிறது.
சமீபத்தில் திரைக்கு வந்த டியர் காம்ரேட் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அணுகியது நடிகை சாய் பல்லவியை தான் ஆனால் இந்த திரைப்படத்தில் முத்தக் காட்சிகள் மற்றும் ரொமாண்டிக் காட்சிகள் இருந்ததால் அந்த படத்தை நிராகரித்திருக்கிறார் நடிகை சாய்பல்லவி.
மேலும், விஜய் தேவார கொண்ட படங்கள் என்றாலே அதில் ரொமான்ஸ் காட்சிகள் லிப்லாக் காட்சிகள் இடம் பெறுகின்றன. எனவே, அவருடன் எந்த படத்திலும் நான் நடிக்க மாட்டேன் என்ற முடிவு எடுத்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி என்று கூறப்படுகிறது.