அந்த வேலை மட்டும் என்கிட்ட நடக்காது..! – போட்டு உடைத்த சாய் பல்லவி..!

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு அறிமுகமானவர் சாய்பல்லவி ( Sai Pallavi ). சிறந்த நடனக்கலைஞர். 2015ல் மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தில், மலர் கேரக்டரில் அறிமுகமானார். முதல் படத்திலேயே, தனது வசீகர நடிப்பால், நடனத்தால் ரசிகர்களின் அபரிமிதமான அன்பை பெற்றார். மாரி 2. என்ஜிகே, கலி, கார்கி, பாவ கதைகள், தியா, தாம் தூம், கஸ்தூரி மான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Image Source : Unknown
அந்த வேலை மட்டும் என்கிட்ட நடக்காது..! - போட்டு உடைத்த சாய் பல்லவி..!

மேக்கப் போடாத இவரது முகத்தில், பருக்கள் ஏராளமாக காணப்படுகின்றன. அதையும் கடந்து இவரது நடிப்பும், நடனமும் ரசிகர்களை சுண்டி இழுத்து, இவரது படங்களை ரசிக்க வைக்கிறது. பிரேமம் படத்தை தொடர்ந்து, 2016ம் ஆண்டில் வெளியான கலி படத்தில், துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்திருந்தார். வருண் தேச்சுடன் நடித்த பிடா என்ற தெலுங்கு காதல் படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதில் பானுமதி என்ற கேரக்டரில் சாய் பல்லவி நடித்திருந்தார்.
இவர், எம்பிபிஎஸ்., படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். சாய்பல்லவி, தனது சொந்த முயற்சியில் கோவையில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி வருவதும் குறிப்பிடத்தகது.

Image Source : Unknown
அந்த வேலை மட்டும் என்கிட்ட நடக்காது..! - போட்டு உடைத்த சாய் பல்லவி..!

தற்போது, சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார்.சாய் பல்லவி, கேரளாவை சேர்ந்தவர் என்பதால், இயல்பிலேயே நல்ல சிவந்த நிறம் கொண்டவர். ஆனால், அவர் முகத்தில், பருக்கள் அதிகம். பருக்களை மறைப்பதற்காக, அவர் மேக்கப் செய்தால், அவரது அழகு முற்றிலும் மாறிப்போய், வேறு மாதிரியான முகத்தோற்றம் வந்து விடுகிறது. சாய் பல்லவியா இது என ஆச்சரியப்படும் அளவுக்கு, மேக்கப் இவரது முகத்தை மாற்றி விடுகிறது. இப்படி முக பருக்களால், முகத்தின் தோற்றத்தையே மாற்றிவிடும் மேக்கப்பை, சாய் பல்லவி துவக்கத்தில் இருந்தே தவிர்த்து வருகிறார். மேலும், முகப்பருக்கள் விஷயத்தில்,மனதளவில் அவர் பாதிக்கவும் செய்கிறார்.

Image Source : Unknown
அந்த வேலை மட்டும் என்கிட்ட நடக்காது..! - போட்டு உடைத்த சாய் பல்லவி..!

எனினும், பிரேமம் படம் துவங்கி, இதுவரை அவர் படங்களில் மேக்கப் போடுவது இல்லை. மேக்கப் போடும் வேலை மட்டும் என்னிடம் நடக்காது என்பதில் அவர் பிடிவாதமாக இருந்து வருகிறார்.

நடிகைகளை பொருத்த வரை, மேக்கப் மட்டுமே அவர்களது ஆயுதமாக இருக்கிறது. இளம் வயதை கடந்தும் ஐஸ்வர்யா ராய், குஷ்பு, ராதிகா போன்றவர்கள் இன்னும் தைரியமாக திரையின் முன் தோன்றி நடிப்பதற்கு காரணம்,மேக்கப்தான். வயதையும், முதிர்ச்சியையும் மேக்கப்தான் மறைக்கிறது.

Image Source : Unknown
அந்த வேலை மட்டும் என்கிட்ட நடக்காது..! - போட்டு உடைத்த சாய் பல்லவி..!

அந்த வகையில், நடிகைகளின் பாதுகாப்பு கவசமே மேக்கப் என்ற நிலையில், சாய் பல்லவிக்கு மட்டுமே அது விதிவிலக்காக இருக்கிறது. மேக்கப் போட்டால், தனது இயல்பான அழகை அது கெடுத்துவிடும் என்பதால், தான் நடித்த படங்களில் இதுவரை, மேக்கப் இல்லாமல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், மேக்கப் இல்லாத இந்த புகைப்படங்களை பாருங்கள், உண்மையிலேயே சாய் பல்லவி தனது இயல்பான அழகில், தன் ரசிகர்களை வசீகரப்படுத்தவே செய்கிறார் அல்லவா?