சாய்பல்லவிக்கு டும்… டும்… டும்… மாப்ள யாரு தெரியுமா..? இந்த தெலுங்கு பிரபலமா..? – வைரல் போட்டோ…! – உண்மை என்ன..?

சாய்பல்லவி கோயம்புத்தூரை சேர்ந்தவர், 1992 இல் பிறந்தார். இவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, இவர் அப்பா செந்தாமரை கண்ணன் மற்றும் அம்மா ராதா இவருக்கு பூஜா என்ற தங்கையும் உள்ளார், அவரும் ஒரு நடிகையாம்.

சாய் பல்லவி நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த நடன கலைஞரும் ஆவார். மேலும் இவர் மருத்துவ படிப்பையும் முடித்துள்ளார். ஆனால் மருத்துவப் பயிற்சியை மேற்கொள்ளாது தனக்கு விருப்பமான நடிப்பையே மேற்கொண்டுள்ளார்.சாய் பல்லவி முதலில் தாம் தூம், கஸ்தூரிமான் போன்ற தமிழ் திரைப்படங்களில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

 கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குநர் அல்போன்சு புத்தாரென் இயக்கிய பிரேமம் என்னும் மலையாளப் திரைப்படத்தில் மலர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

சாய் பல்லவி என்னும் பெயரை விட மலர் என்ற பெயரிலேயே இவர் பிரபலமானார். இப்படத்தில் இவர் நடித்ததற்காக சிறந்த அறிமுக கதாநாயகிகானா பிலிம்பேர் விருதினை பெற்றார்.

சேகர் கம்முலாவின் பிடே என்னும் திரைப்படத்தில் தெலுங்கில் அறிமுகமானார். திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது மேலும் பல தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நாயகியாகவும் மாறினார்.

இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என்ற மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர்.இவரின் சிறந்த நடிப்பு மற்றும் நடன அசைவுகளுக்காக ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் ரவுடி பேபி என்னும் பாட்டில் சிறப்பாக தனத்திற்கு இணையாக நடனம் ஆடினார்.

பிரபலமானதோடு இவரைப் பற்றி சில தேவையில்லாத வதந்திகளும் பரவ ஆரம்பித்தது. சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை வந்தாலும் அங்கிருப்பவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். என்பது போன்ற செய்திகள் பரவ ஆரம்பித்தது. இப்படிப்பட்ட சூழலில் சாய் பல்லவி தனது வலைதள பக்கத்தில் திருமணம் ஆனது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இப்பொழுது படத்தில் பிரபல நடிகர் நாணியுடன் இருப்பது போன்று உள்ளது.

இந்த புகைப்படம் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ஷியாம் சிங்க ராய் படத்தின் ஒரு காட்சியாகும் இதையே சாய் பல்லவி தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்குள் சாய்பல்லவிக்கு திருமணமாகிவிட்டது என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.