சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வு – நடிகை சமந்தா திடீர் முடிவு

நடிகை சமந்தாவின் உடல் நல பாதிப்பு இன்னும் தீரவில்லை. இதையடுத்து, அவர் சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

நடிகை சமந்தா நடிப்பில், வரும் 14ம் தேதி சாகுந்தலம் வெளியாக இருக்கிறது. மயோசிடிஸ் எனப்படும் தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார் என்றாலும், இன்னும் முழுமையாக அந்த நோயின் தாக்கத்தில் இருந்து அவர் விடுபடவில்லை.

மீண்டும் மீண்டும் நோய் பாதிப்புடன் படங்களில் நடித்தால், உடல்நலமும் இன்னும் மோசமாகும், படங்களில் நடிப்பாற்றாலும் குறைந்து, ரசிகர்கள் ஏமாற்றடைய நேரிடும் என்பதால், சமந்தா இந்த திடீர் முடிவுக்கு வந்திருக்கிறார்.

நான் கடுமையாக உழைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவள். அந்த கடுமையான உழைப்பால் கிடைத்த வெற்றியே எனக்கு மிக பிடிக்கும். என் நடிப்புக்கு ஏற்ற சம்பளத்தை, தயாரிப்பாளர்களே முன்வந்து தர வேண்டும், நான் யாரிடமும் சம்பளம் குறித்து கேட்க மாட்டேன்.

கடந்த சில மாதங்களாக, இந்த நோய் பாதிப்பால் மிகவும் வேதனைப்படுகிறேன். பழைய நிலைக்கு திரும்ப மிகவும் போராடிக்கொண்டு இருக்கிறேன். ஒத்துக்கொண்டபடி குஷி, சிட்டாடல் படங்களில் நடித்த பிறகு, சிறிது காலம் முழுமையாக ஒய்வெடுக்க முடிவு செய்துள்ளேன்.

படங்களில் நல்லவிதமாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த ஓய்வை எடுக்கிறேன். முழு ஆற்றலுடன், பழைய சமந்தாவாக திரும்பி வருவேன், என்று கூறியுள்ளார்.
இது சமந்தாவின் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.