பெண்மைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தற்போது அதிக அளவு தேர்வு செய்து நடிகை சமந்தா நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த யசோதா படம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் வாடகை தாயாக மாறும் பெண்களின் பிரச்சனைகள் பற்றியும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்களைப் பற்றி புட்டு புட்டு வைத்திருந்தார்கள்.
மக்கள் மத்தியில் விரும்பி பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் இந்த படம் அமைந்தது என்றால் அதனுடைய கதை கரு மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அந்த வரிசையில் தற்போது வரலாற்று காவியமான சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் டிரைலர் வெளியீடு அண்மையில் நடந்தது. இதனைப் பார்த்து ரசிகர்கள் திரைப்படத்தை பார்க்கக்கூடிய ஆவலில் தற்போது காத்திருக்கிறார்கள்.
மேலும் இந்த படத்தில் அருவி படத்தில் நடித்து புகழ் பெற்ற அதிதி பாலன் ஒரு குறிப்பிட்ட ரோலில் நடிக்கிறார் அதுவும் சமந்தாவின் தோழியாக இந்த படத்தில் இவர் நடித்திருக்கிறார்.
அருவி படத்துக்கு பிறகு இவருக்கு நல்ல படங்கள் வாய்க்கும் என்று கருதிய நிலையில் 3 வருட இடைவெளிக்குப் பிறகு குட்டி ஸ்டோரி என்ற ஆந்த்ராலஜி படத்தில் நடித்திருந்தார். மேலும் கோல்ட் கேஸ், படவேட்டு என்ற இரண்டு மலையாள படங்களில் நடித்து இவர் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இப்போது இவர் தங்கர்பச்சன் இயக்கக்கூடிய கருமேகங்கள் கலைகின்றது என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வந்துள்ளது. அருவி படத்துக்கு பின் முழு கதாநாயகியாக இந்த படத்தில் இவர் நடித்து வருகிறார்.
அதுபோல தான் சகுந்தலம் படத்திலும் இவர் ஒரு மிக முக்கியமான கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு சமந்தாவின் தோழியாக நடிக்க வந்திருப்பதை பார்த்து இவருக்கு நிச்சயமாக இந்த கதையில் முக்கியத்துவம் இருக்கிறதா என்பது படம் வெளிவந்த பின்பு தான் தெரியவரும் என்று கூறி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து இன்றைய தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லக்கூடிய படங்களின் வரிசையில் எந்த படம் கண்டிப்பாக இடம் பெறும் என்று ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவருக்குமே பாராட்டுதல்களை தெரிவித்து இருக்கிறார்கள்.