மையோசைட்டிஸ் என்ற ஒரு விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சமந்தா அதற்கான சிகிச்சை முறையாக எடுத்துக் கொண்டிருக்கிறார். சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதா நீண்ட நாட்களாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிடாமல் நடிகை சமந்தா தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
தன்னுடைய தாய் பின்னால் அமர்ந்திருக்க டைட்டான டாப்ஸ் மற்றும் லெகின்ஸ் பேண்ட் சகிதமாக நான் நலமாக உள்ளேன் என்று சொல்வது போல ஒரு செல்பி புகைப்படத்தை க்ளிக் செய்து அதனை இணையத்தில் அப்லோட் செய்திருக்கிறார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் சூரியவம்சம் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரை பார்த்து கண்ணீர் சிந்துவது போல தங்களுடைய கண்களை துடைத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா ஒரு கட்டத்தில் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் திருமணம் செய்யும் போதே பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் ஆலோசனைகளும் வந்தன. அந்த குடும்பத்தில் திருமணம் செய்யாதீர்கள். அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இரண்டு மனைவியர்கள். நீங்கள் ஏன் அந்த குடும்பத்தில் திருமணம் செய்கிறீர்கள் என்று கூறினார்கள்.
யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை அதேபோல நடிகை சமந்தா அவரை விவாகரத்து செய்து விட்டார். விரைவில் நடிகர் நாக சைதன்யா அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கின்றது.
இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய நோயுடன் போராடி வரும் நடிகை சமந்தா அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வருகிறார். விரைவில் நலம் பெற்று மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் தங்களுடைய ஆவலை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருக்கிறது.
விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் வந்து தமிழ் சினிமாவை கலக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.