“தன்னுடைய ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட ரசிகர்கள்….” – பரவசமடைந்த சமந்தா என்ன செய்துள்ளார் பாருங்க…!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘புஷ்பா’ நேற்று உலகம் முழுக்க வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஊடகங்களின் விமர்சனங்கள் ’சுமார்’ என்று வந்தாலும் ரசிகர்கள் ’சூப்பர்’ என்று கொண்டாடி வருகிறார்கள்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியானாலும் அனைத்து மாநிலங்களிலுமே ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னதாக சமந்தா கவர்ச்சி நடனம் ஆடிய பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடி உள்ளார்.

ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்பாடல், தற்போது சர்ச்சையிலும் சிக்கியது.இந்த பாடல் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து மிகவும் இழிவாக எழுதப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் இப்பாடலை தடை செய்ய வேண்டும் அல்லது இப்பாடல் வரிகளை மாற்ற வேண்டும் எனக் கோரி ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுள்ளது.ஆனால் இந்த பாடலுக்கு ரசிகர்களின் வரவேற்பு தாறுமாறாக உள்ளது.

திரையரங்குளில் வெளியனா புஷ்பா படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் அங்கு சமந்தா பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர். இந்த வீடியோக்களை சமந்தா தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version