சமந்தா கிட்ட கூட வர முடியாது.. சோபிதாவின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்..

சமந்தா கிட்ட கூட வர முடியாது.. சோபிதாவின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்..

சினிமா பிரபலங்களை பொருத்தவரை அவர்களது மத்தியில் திருமணம் என்பதும் விவாகரத்து என்பதும் சகஜமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து 10 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து விட்டாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சில காலங்களே சேர்ந்து வாழ்ந்த ஜோடிகளில் முக்கியமானவர்களாக சமந்தாவும் நாகசைதன்யாகவும் இருக்கின்றனர். சமந்தா தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக பிரபலம் அடைந்தவர்.

நாக சைதன்யாவுடன் காதல்:

ஆனால் நான் ஈ திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. நான்கு திரைப்படத்திற்கு பிறகுதான் தெலுங்கு சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றார் சமந்தா. அதனை தொடர்ந்து அவருக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாகசைதன்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது இல்லற வாழ்க்கை சில காலங்களே நீடித்தன. 2021 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். சமந்தா நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தது நாக சைதன்யாவிற்கு பிடிக்கவில்லை என்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சமந்தா கிட்ட கூட வர முடியாது.. சோபிதாவின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்..

இந்த நிலையில் உடல் நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்குப் பிறகு சினிமாவிலும் பெரிதாக கவனம் செலுத்த முடியாமல் உடல் நலத்தில் கவனம் செலுத்தி வந்தார். சமந்தா பிறகு யாரையும் காதலிக்கவோ அல்லது திருமணம் செய்து கொள்ளவோ இல்லை.

சோபிதா துலிபாலாவுடன் நிச்சயம்:

இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை நேற்று நிச்சயம் செய்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே வெகு நாட்களாக காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடும்பத்தினர் அனுமதியுடன் நேற்று இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.

அவர் சமந்தா அளவிற்கு சினிமா மத்தியில் பிரபலமான நடிகை கிடையாது. இருந்தாலும் தற்சமயம் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இருக்கிறார். தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

சமந்தா கிட்ட கூட வர முடியாது.. சோபிதாவின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்..

இந்த நிலையில் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற கேள்வி சமீபத்தில் எழுந்து வந்தது. இதுக்குறித்து பார்க்கும் பொழுது சோபிதா துலிபாலாவின் மொத்த சொத்து மதிப்பே ஏழு முதல் 10 கோடிக்குள்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் சமந்தாவின் சொத்து மதிப்பு 80 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. இத்தனைக்கும் நாக சைதன்யாவிடம் இருந்து வந்த ஜீவனாம்சம் பணத்தை கூட வேண்டாம் என்று தவிர்த்து விட்டார் சமந்தா. அதையும் சேர்த்தால் இப்பொழுது அவரிடம் சொத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே சோபிதாவுடன் கம்பேர் செய்யும் பொழுது சமந்தாவின் சொத்து மதிப்பு மிக அதிகம் என்று கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …