தற்போது நடிகைகள் மத்தியில் நைட் பார்ட்டி கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. பிரபலங்கள் மற்றும் நடிகைகள் பார்ட்டி செய்வதற்காகவே கிழக்கு கடற்கரை சாலையில் பல பங்களாக்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
இன்னும் சில பங்களாக்கள் பிரபலங்கள் தங்களுடைய இரவு நேர பாட்டியை கொண்டாடுவதற்காகவே உருவாக்கப்படுகின்றன. அரசியல் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என வார இறுதி நாட்களில் போதை பார்ட்டிகளை நடத்தி குதூகலைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு பணம் புரளுகிறது. மறுபக்கம் ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் கூட திரைப்படங்களில் சமூகநீதி.. ஏழைகளை காக்க வேண்டும்.. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.. விவசாயத்தை காப்போம்.. என ஏக வசனம் பேசி கொள்ளை லாபம் பார்த்துவிட்டு.
நைட் பார்ட்டி.. அள்ளுது..
அந்த பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் வெளிநாடுகளில் முதலீடு செய்வது நில புலன்களில் முதலீடு செய்வது மற்றும் லாபத்தில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வது என எல்லாம் தாண்டிய பிறகு இரவு நேர பாட்டிகளில் லட்சங்களில் சில நேரங்களில் கோடிகளில் கூட செலவு செய்கிறார்கள்.
பிரபலங்கள் அந்த அளவுக்கு இரவு நேர பாட்டிகளுக்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது. அப்படி நடக்கும் இரவு நேர பாட்டிகளில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இளம் நடிகைகள் என்று கூறலாம் பட வாய்ப்புக்காக பாட்டில் கலந்து கொள்வது வெற்றியை கொண்டாடுவதற்காக பாட்டில் கலந்து கொள்வது என பாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக காரணங்களை தேடி நடிகைகள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில், நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே சமீபத்தில் ஒரு இரவு நேர பாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.
வித்தியாசமான பார்ட்டி..
ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமான பார்ட்டியாக இருக்கும் போல தெரிகிறது. காரணம் தன்னுடைய அம்மாவுடன் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை சம்யுக்தா ஹெக்டே.
தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் பொழுது போதையில் ஆட்டம் போடும் இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். பெங்களூருவை பூர்விமாகக் கொண்ட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் பப்பி மற்றும் கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதுவும் அம்மாவுடன்..
சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மன்மத லீலை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இணைய பக்கங்களில் படுகிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது இரவு நேர பார்ட்டி ஒன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இது..? குடியும் கூத்துமா..! அதுவும் அம்மாவுடன்..?!?!? என்று வாயை பிளந்து கிடக்கின்றனர். மேலும் இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ என்று நமக்கு சிரிப்பு சிரிக்கும் கோடம்பாக்க வாசிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.