கடந்த சில வாரங்களாக பிரபல சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் இடையேயான விவாகரத்து சர்ச்சை தான் சின்னத்திரை வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கின்றது.
மட்டுமில்லாமல் இணைய பக்கங்களிலும் இது குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்து வருகின்றன. இருவருக்கும் ஒத்துவரவில்லை, பிரச்சனை என்று ஆகிவிட்டது, பிரிந்து செல்வது என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிறகு ஒருவர் மீது ஒருவர் இப்படி கொச்சை கொச்சையான புகார்களை கூறிக் கொண்டிருப்பது முறையாக படவில்லை.
பிரிந்து செல்வது என்று முடிவெடுத்து விட்ட பிறகு எதற்காக ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். எந்த குறையும் சொல்லாமல் பிரிந்து சென்று அவர் அவர் வாழ்கையை கவனிக்க வேண்டும். இதுதான் கணவன் மனைவியாக ஒரு நாள் வாழ்ந்திருந்தாலும் கூட, அந்த உறவுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய மரியாதையாக இருக்கும்.
ஆனால், நீங்கள் இருவருமே ஆள் மாற்றி ஆள் ஒருவர் மீது ஒருவர் கொச்சை கொச்சையான புகார்களை கூறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று இணையவாசிகள் சலித்துக் கொள்ளும் அளவுக்கு குழாயடி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் விஷ்ணுகாந்த் இருவரும்.
சமீபத்தில், விஷ்ணுகாந்த் தன்னை ஒரு உடலுறவு கொள்ளும் பொம்மையாக மட்டுமே பார்த்து இருக்கிறார். 24 மணி நேரமும் என்னுடன் அவர் உடலுறவில் இருக்க வேண்டும். ஆபாச படங்களை காட்டி அதில் இருப்பது போல என்னை செய்ய சொல்கிறார். உச்சகட்டமாக நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை வீடியோ எடுத்து இருவரும் சேர்ந்து பார்க்கலாம் என்று பெட்ரூமில் கேமராவை வைக்க முயற்சி செய்தார். உள்ளிட்ட பல்வேறு பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார் நடிகை சம்யுக்தா.
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக விஷ்ணுகாந்த் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இன்னும் அதிர்ச்சியை கிளப்புகிறது. காரணம் நடிகை சம்யுக்தா திருமணத்திற்கு முன்பே தன்னுடைய கன்னித்தன்மையை இழந்து விட்டார் என கூறியிருக்கிறார் விஷ்ணுகாந்த்.
இது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது. இது குறித்து அவர் கூறியதாவது, நடிகை சம்யுக்தா திருமணத்திற்கு முன்பு ஏற்கனவே ரவி என்ற ஒருவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.
திருமணத்திற்கு பின்பு தான் அவருடனான உறவை துண்டித்து இருக்கிறார். இதனை இருவரும் பேசிய ஆடியோ ஒன்றில் உங்களால் கேட்க முடியும். ஒரு தொலைபேசி உரையாடலில் சம்யுக்தா உடன் தொடர்பில் இருந்த ரவி என்பவர் சம்யுக்தாவுக்கும் தனக்கும் நடந்த அந்தரங்கமான விஷயங்களை பேசி இருப்பார்.
இதனை அப்படியே ஒப்புக்கொள்ளும் விதமாக சம்யுக்தாவும் அவரது தாயும் இன்னொரு ஆடியோவில் பேசியிருப்பார்கள். ஆனால், நேற்று என்னைப் பற்றி அவதூறாக இவர்கள் கூறிய வீடியோவில் இந்த ஆடியோ குறித்து ஒரு வார்த்தை கூட அவர்கள் பேசவில்லை.
நானும் இதைப்பற்றி பேசுவார்கள் என்று முழு வீடியோவையும் பார்த்தேன். ஆனால் அவர்கள் இந்த விஷயம் குறித்து கடைசி வரை பேசவே இல்லை. அவர்கள் என்னை எப்படியாவது முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். என் பக்கம் நியாயம் இருக்கிறது.
இப்படியான அவதூறான குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலம் என்னை முடக்கிவிட முடியும் என்னுடைய பெயரை கெடுத்து விட முடியும் என்று நம்புகிறார்கள். இந்த நேரத்தில் நான் அமைதியாக இருந்தால் அவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது போல ஆகிவிடும்.
இந்த காரணத்திற்காக தான் நான் வீடியோவில் பேசுகிறேனே தவிர எங்கள் இருவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினையை எங்கள் குடும்பத்திற்குள்ளேயே முடித்துக் கொள்ள வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.
ஆனால், அதற்கு அவர்கள் வழி விடமாட்டேன் என்கிறார்கள். என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள் என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார் விஷ்ணுகாந்த்.
சீரியல் நடிகர்கள் சினிமா நடிகர்கள் திருமணம் செய்து கொள்வதும் சில மாதங்கள் சில வருடங்களில் விவாகரத்து செய்வதும் வாடிக்கையாக வரக்கூடிய செய்தி தான்.
ஆனால் இந்த அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் சேற்றை பூசிக்கொண்டு பிரிவது நாம் பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இவர்கள் இருவரும் தங்களுடைய அந்தரங்கமான விஷயங்களை பொது வழியில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இது தவறு என்பதுதான் பொதுவான ரசிகர்களின் பொதுவான இணையவாசிகளின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே இனிமேலாவது நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் தங்களுக்கு உண்டான பிரச்சனையை தங்களுக்குள் தங்கள் குடும்பத்தினருக்குள் பேசி முடித்துக்கொண்டு பிரிந்து சென்றுவிட வேண்டும் அல்லது சேர்ந்து வாழ வேண்டும்.
இப்படி பொதுவெளியில் தங்களுக்குள் இருக்கும் ரகசியங்களை போட்டு உடைப்பது என்பது முறையாக இருக்காது. இது இருவருடைய எதிர்கால வாழ்க்கைக்குமே சிக்கலாக மாறிவிட வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன என்று அவர்களுக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள் இணைய வாசிகள்.