நாங்க ட்ரெஸ் மாத்துற நேரத்தில் கேரவனில்.. கமல் பட நடிகர் செய்த வேலை..! மனம் நொந்த சாந்தினி வில்லியம்ஸ்..

சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் இருந்து இந்த கேரவன் வசதி என்கிற விஷயம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் எல்லாம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில்தான் படமாக்கப்பட்டு வந்து கொண்டிருந்தன. இதனால் கேரவன் வசதி என்பதும் எல்லா திரைப்படங்களுக்கும் இருக்கவில்லை.

மிக தாமதமாகதான் தமிழில் நடிகர்கள் தங்கும் கேரவன் என்கிற விஷயம் வந்தது. அதற்கு முன்பு வரை நடிகைகள் எல்லாம் படபிடிப்பு தளங்களில் உடை மாற்ற வேண்டும் என்றால் ஏதாவது மரத்துக்கு பின்னால் நின்றுதான் உடை மாற்றுவார்கள் அல்லது நான்கு பேர் நின்று கொண்டு புடவையை வைத்து மறைப்பு போல பிடித்துக் கொள்வார்கள்.

ட்ரெஸ் மாத்துற நேரத்தில்

அதற்குள்ளாக உடையை மாற்றுவார்கள் நடிகைகள். இதனாலேயே பாலிவுட் மாதிரியான வேறு சினிமாக்களுக்கு செல்லும்பொழுது நடிகைகளை மிகவும் தாழ்வாக பார்த்தனர் அங்கு இருக்கும் நடிகர்கள். ஏனெனில் அப்பொழுதே பாலிவுட் சினிமாவில் கேரவன் வசதி வந்துவிட்டது.

விஜயகாந்த் மாதிரியான பெரும் நடிகர்கள் பலரும் கூட கேரவன் வசதி இல்லாமல் பல படங்களில் நடித்திருக்கின்றனர். கேரவன் வசதி தமிழ் சினிமாவில் வரத் துவங்கிய பிறகு சினிமா படங்களில் நடிக்கும் முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் கேரவன் தயார் செய்து தர துவங்கினார்கள்.

 

அந்த வகையில் படத்தின் கதாநாயகன் கதாநாயகி போன்ற முக்கிய ஆட்களுக்கு மட்டும் கேரவன் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் மொத்தமாக மாறுபட்ட ஒரு இயக்குனராக இருந்தவர் இயக்குனர் சங்கர் என்று கூறுகிறார் பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ்.தமிழ் சினிமாவில் அதிகபட்ஜெட்டில் படம் எடுக்கும் ஒரு இயக்குனராக இருந்து வருகிறார் சங்கர்.

மனம் நொந்த சாந்தினி

ஷங்கர் இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன. இந்த நிலையில் அந்நியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் சாந்தி வில்லியம்ஸ் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்பொழுது அவருக்குமே அந்தப் படத்தில் கேரவன் வசதி செய்து கொடுத்திருந்தனர்.

அதேபோல நடிகர் நெடுமுடி வேணு மற்றும் விவேக் ஆகிய இருவருக்கும் கூட கேரவன் வசதி செய்து கொடுத்திருந்தனர். ஆனால் நெடுமுடி வேணு எப்போது பார்த்தாலும் விவேக்கின் காரவனில் இல்லாமல் எங்களுடைய காரவினில் தான் தங்கி இருப்பார்.

நாங்கள் உடைமாற்றும் சமயத்தில் மட்டும் வெளியில் சென்று விட்டு மீண்டும் அன்று வந்து படுத்துக் கொள்வார் என்று அந்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.

 

About Jiraya

Check Also

“அந்தப் பெண்ணை தொடர்புபடுத்துவது தேவையில்லாதது” உண்மை ஒருநாள் வெளிவரும் – கொந்தளித்த ஜெயம் ரவி..

தற்போது இணையம் எங்கும் ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் படு வேகமாக பரவி வந்ததை அடுத்து ஜெயம் ரவிக்கும் கோவாவை …

Exit mobile version