வெண்ணிலா கபடிக்குழு நாயகி, சரண்யா மோகன் இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

சரண்யா மோகன், (Saranya Mohan) காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினி வீட்டு சிறுமிகளில் ஒருவராக நடித்திருப்பார். பிறகு வளர்ந்த பிறகு, பருவ பெண்ணாக பல படங்களில் நடித்து, பலரையும் கவர்ந்தார்.சரண்யா மோகன், கடந்த 1989ம் ஆண்டில் பிறந்தவர். தமிழ், மலையாள மொழி படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார்.

யாரடி நீ மோகினி படத்தில், நயன்தாராவின் தங்கையாக நடித்திருப்பார். பிராமண வீட்டுப் பெண்ணாக, பிராமண பாைஷ பேசி, தனுைஷ காதலிப்பார். சிவாஜி – பத்மினி பாடலை, அதே தோற்றத்தில் தனுஷூம், சரண்யா மோகனும் பாடி ஆடி நடித்திருப்பர். இது, ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அடுத்து, சுசீந்திரன் இயக்கத்தில், வெண்ணிலா கபடிக்குழு படத்தில், கிராமத்து இளைஞன் விஷ்ணு விஷாலை, ஊர் திருவிழாவுக்கு வந்த போது காதலிப்பார். இந்த படத்திலும் இவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது.

Saranya Mohan

சரண்யா மோகன், கேரள மாநிலம், ஆலப்புழாவில் பிறந்தவர். இவருக்கு, அப்பு என்ற மற்றொரு செல்லப் பெயரும் உண்டு. பாலக்காட்டு மோகன் இவரது தந்தை. இவரது 2வது மகள் சுகன்யா.
பள்ளி நாட்களில் நடனமாடுவதில் சிறந்து விளங்கியவர் சரண்யா மோகன். ஒருமுறை பள்ளி விழாவுக்கு வருகை தந்த இயக்குநர் பாசில், இந்த சிறுமியின் நடனம், பேச்சு போன்றவற்றை கவனித்து, இவருக்கு தனது, காதலுக்கு மரியாதை படத்தில், சிறுமி கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்தார். அதைத்தொடர்ந்து, ஹரிகிருஷ்ணதாஸ் என்ற மலையாள படத்தில், இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Saranya Mohan

பிறகு ஒருநாள் ஒரு கனவு, ஜெயம்கொண்டான், மகேஷ், சரண்யா மற்றும் பலர், பஞ்சாமிர்தம், அஆஇஈ, ஆறுமுகம், தெலுங்கில் கேமிஸ்ட்ரி, ஹாப்பிகா ஹாப்பிகா, கல்யாண் ராம் கதை, மலையாளத்தில் நாடகமே உலகம், தமிழில் அழகர்சாமியின் குதிரை, வேலாயுதம், ஒஸ்தி, ஈரம், கோலாகலம் உள்ளிட்ட பல படங்களில், சரண்யா மோகன் நடித்திருக்கிறார்.

Saranya Mohan

இதில், அழகர்சாமியின் குதிரை படத்தில், அப்புவுக்கு ஜோடியாக நடித்தார். ஈரம் படத்தில், ஆவியாக சில காட்சிகளில் நடித்தார். வேலாயுதம் படத்தில் விஜய் தங்கையாக நடித்திருப்பார். ஜெயம்கொண்டான் படத்தில், பாவனா தங்கையாக நடித்திருப்பார். இப்படி ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கேரக்டர்களில் சரண்யா மோகன் நடித்திருக்கிறார்.

Saranya Mohan

சரண்யா மோகன், திருமணம் செய்தபின், குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். திருமணத்துக்கு பின், படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட சரண்யா மோகன், முழுநேர இல்லத்தரசியாக மாறி, குடும்பத்தை கவனித்து வருகிறார்.

Saranya Mohan

எனினும் ஒரு காலகட்டத்துக்கு பிறகு இவரும் சினிமாவிலோ அல்லது டிவி சீரியல்களிலோ நடிக்க வரும் வாய்ப்புகள் உள்ளதாக, ரசிகர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில், வெளியான சரண்யா மோகனின் அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version