தமிழ் சினிமாவை பொருத்தவரை ராதிகா சரத்குமார் ஜோடி ( Radhika Sarathkumar ) உச்சகட்டத்தில் இருந்த நடிகர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி வரலட்சுமி என்ற பெண் இருக்கிறார். அவரும் மிகச்சிறந்த தெலுங்கு பட நடிகையாக தற்போது மாறி வருகிறார்.
மேலும் சரத்குமார் ராதிகா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். மனைவி ராதிகா மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பழைய படங்களில் அதிக அளவு நடித்தும் இருக்கிறார்.
நடிகை ராதிகா நடிகவேள் ராதாரவியின் மகள் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். தற்போது திரைத்துறையில் இருக்கும் ராதிகா திரைத்துறையில் சாதித்ததைப் போலவே சின்னத்திரையில் சீரியல்களை தயாரிப்பது, அதில் நடிப்பது என்று எப்போதுமே தன்னை பிஸியாக வைத்துக் கொள்பவர்.
மேலும் அண்மைக்காலமாக இவர் அம்மா ரோல்களை அதிகளவு செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
இந்த 45 வருடங்களும் இவரது நடிப்பை பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும் பெண்களுக்கு முன் உதாரணமாக இவர் தனது பணிகளை செய்து வருகிறார் என்று கூறலாம்.
அந்த வகையில் அண்மையில் நடந்த ஒரு பேட்டியில் தன்னுடைய மனைவியான ராதிகாவை பற்றி உயர்வாக பேசிய சரத்குமார் குணசத்திர நடிகையான தனது மனைவிக்கு இன்று வரை தேசிய விருது வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.
மேலும் இவர் தனது கேள்வியில் இவ்வளவு நாட்களாக திரையுலகில் இருக்கும் இவருக்கு ஏன் அந்த விருது தரப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பிய விதம் மட்டுமல்லாமல் அவர் கோபம் அடைந்த விதத்தை அனைவரும் அறிந்து கொண்டு அதில் நியாயம் உள்ளதாகவே கூறியிருக்கிறார்கள்.
தனது மகள் வரலட்சுமி சினிமாவைப் பற்றி நன்கு படித்துவிட்ட பிறகு தான் நடிகையாக இருக்கிறார் மொத்தத்தில் என் குடும்பத்தில் அதிக அளவு நடிப்புத் துறையில் இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை பெருமிதமாக சரத்குமார் தெரிவித்து இருக்கிறார்.
இவரது எந்த குமுறலை புரிந்து கொண்ட அரசு இனி இவருக்கு தேசிய விருது கிடைக்க முன் வருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.