எண்பதுகளில் அலகு பதுமையாக ரசிகர்கள் மத்தியில் குடி கொண்டிருந்தவர் நடிகை சீதா. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. என ரசிகர்களின் கனவு தேவதையாக இருந்த நடிகை சீதா இயக்குனரும் நடிகருமான பார்த்திபனுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டு அவருடன் இழந்து இரண்டு குழந்தைகளையும் பெற்று எடுத்தார்.
ஆனால், அதன் பிறகு இன்னொரு திருமணம் செய்து அதுவும் விவாகரத்தில் முடிந்தது என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். தற்பொழுது தன்னுடைய இரண்டு திருமணமும் தோல்வியடைந்த நிலையில் தனியாக தன்னுடைய அம்மாவுடன் வசித்து வருகிறார் நடிகை சீதா.
இவருடைய திருமண வாழ்க்கை குறித்து பலரும் அறிந்திடாத தகவல்களை இங்கே பார்க்கலாம். நடிகர் பார்த்திபனை பிறந்த பிறகு சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்த தொடங்கினார் நடிகை சீதா அப்படி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவரை காதலித்து இரண்டாவதாக அவரை திருமணம் செய்து கொண்டார்.
ஒரு நாளைக்கு மூன்று ஷிஃப்ட்..
80களில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை சீதா நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
பட வாய்ப்புகளை ஒப்புக்கொண்டு ஒரு நாள் முழுதும் மூன்று ஷிப்ட் போட்டு படங்களில் நடித்திருக்கிறார் நடிகை சீதா என்பது பலரும் தகவல் மட்டும் இல்லாமல் பட வாய்ப்புக்காக கால் ஷீட் இல்லாமல் பல பட வாய்ப்புகளை தவற விட்டிருக்கிறார் என்பதும் பலரும் அறிந்திடாத தகவல்.
இவருடைய சினிமா வாழ்க்கை அஸ்தமனமாகியதற்கு.. முக்கிய காரணமே.. இவருடைய திருமணம் தான். முதல் முறையாக இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை திரைப்படத்தில் நடித்த நடிகை சீதா. இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என கூறி வந்திருக்கிறார்.
அதன் பிறகு அவருடைய தந்தை வற்புறுத்தரின் பெயரில் இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் பார்த்திபன் மீது காதல் வயப்பட்டு இருக்கிறார் நடிகை சீதா.
வீட்டை விட்டு வெளியேறி திருமணம்..
சீதாவின் வீட்டில் இவருடைய காதலை ஏற்றுக் கொள்வதாக இல்லை. எனவே வீட்டை விட்டு வெளியேறி நடிகர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1989 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என்று நடிகர் பார்த்திபன் சீதாவுக்கு கட்டளையிட்டு இருக்கிறார்.
காதல் கணவரின் அன்பு கட்டளை என்பதால் அதனை ஏற்றுக்கொண்டு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகினார் நடிகை சீதா இதனால் சினிமா ரசிகர்கள் மெல்ல மெல்ல நடிகை சீதாவை மறக்க தொடங்கினார்கள்.
கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை சீதா கடந்த 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். மீண்டும் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்த இவர் தன்னுடைய நடிப்பை துவங்கும் விதமாக முயற்சி செய்திருக்கிறார்.
சீரியல் பயணம்..
ஆனால், சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதாக தெரியவில்லை. ஆனால் சீரியல்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றது. எனவே கிடைக்கும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு பயணிப்பது தான் சரியான முடிவாக இருக்கும் என்று சீரியலில் பயணித்து தொடங்கி இருக்கிறார்.
தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த இவ்வாறு கடந்த 2010 ஆம் ஆண்டு தன்னுடைய 43 வது வயதில் தன்னுடன் நடித்துக் கொண்டிருந்த சக சீரியல் நடிகர் சதீஷ் என்பவரிடம் காதல் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.
நடிகர் சதீஷ் பல சீரியல்கள் நடித்திருக்கிறார். குறிப்பிடும்படியாக சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் இரண்டாவது திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்த நடிகை சீதா தன்னுடைய இரண்டாவது கணவருடன் சந்தோஷமாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்தார்.
இரண்டாவது திருமணமும் விவாகரத்து..
சில ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இவர்கள் அடுத்தடுத்த வருடங்களில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 6 ஆண்டுகளில் நடிகர் சதீஷையும் விவாகரத்து செய்து இருக்கிறார் நடிகை சீதா.
தற்பொழுது, தன்னுடைய தாயாருடன் தனியாக வசித்து வரும் நடிகை சீதா சமூக வலைத்தளங்களில் இளமடிக்கைகளுக்கு போட்டியாக ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
வீட்டிலேயே மாடித்தோட்டம் மற்றும் வீட்டை சுற்றிக் காட்டுவது என ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கிறார். சினிமா சீரியல் என இரண்டிலும் நடித்துக் கொண்டு பிஸியாக தன்னை வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை சீதா.
ஒரு காலத்தில் அழகு பதுமையாக கனவு கன்னியாக கவர்ச்சி ராணியாக ரசிகர்கள் நெஞ்சில் கட்டில் போட்டு அமர்ந்திருந்த நடிகை சீதாவின் தனிப்பட்ட வாழ்க்கை ரசிகர்களின் ஆவலுக்கு மாறாக சின்னாபின்னமாகி இருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய மீடியா சேவையை வழங்கி வருகிறார் நடிகை சீதா என்பது குறிப்பிடத்தக்கது.