நடிகை சியமந்தா கிரண் கவர்ச்சியான உடையில் தற்சமயம் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவர் ஒரு தமிழ் சீரியல் நடிகை ஆவார்.இவர் முதல் முதலாக கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.
நடிகை ஸ்யமந்தா கிரண் இவர் 1988 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பிறந்த ஒரு நடிகை. இவர் எத்திராஜ் காலேஜ்ல் தனது பட்டப் படிப்பை முடித்திருந்தார். கல்லூரி காலங்களிலேயே நிறைய மேடை நாடகங்களில் தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் மூலம் அவ்வப்போது குறும்படங்களிலும் நடித்திருந்தார். மேலும் குறும்படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மேலும் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றதால் சீரியலில் முதல் முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கல்யாண முதல் காதல் வரை எனும் சீரியலில் இவருக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி எனும் மிகப் பிரம்மாண்டமான வெற்றி தொடரிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தாமரை,நிலா, ஆயுத எழுத்து, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மற்றும் தென்றல் வந்து என்னை தொடும் போன்ற நிறைய சீரியல்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் ஸ்யமந்தா கிரண் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது கட்டான உடலைக் காட்டி அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
இன்றைய கால சூழ்நிலையில் நிறைய சீரியல் நடிகைகள் கூட கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நாளுக்கு நாள் தனது ரசிகர்களையும் அதிகரித்து வருகிறார்கள்.மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் திரைப்படங்களிலும் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறதாம். இதில் அம்மணி தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.