பிரபல சீரியல் நடிகை ஷாலினி [ Shalini ] தான் விவாகரத்தை பெற்றதை போட்டோ சூட் நடத்திக் கொண்டாடியிருப்பது நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா? என்ற எண்ணத்தை பல மடங்காக பலருக்கும் அதிகரித்து விட்டது.
கலாச்சார சீர்கேடு எந்த அளவு தற்போது நடந்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டு விதமாக எந்த போட்டோ சூட் உள்ளது என்று கூறலாம்.
மேலும் இது பெண்களின் முற்போக்குத்தனத்தை காட்டியிருந்தாலும் ஒரு வகையில் நமது பண்பாட்டை அடித்து நொறுக்கும் வண்ணம் உள்ளது என்று தான் கூற வேண்டும்.
இவர் தனது கணவரான ரியாஸ் தன்னை துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து பெற்று இருக்கிறார். முள்ளும் மலரும் தொடரின் மூலம் பாப்புலரான நபர்களில் ஒருவராக விளங்கிய இவர் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
பொதுவாகவே திரை உலகில் இருப்பவர்கள் அடிக்கடி விவாகரத்து பெறுவதும் பிறகு மீண்டும் மற்றவர்களை மணந்து கொள்வதும் புதிதாக நடப்பதில்லை. எனினும் இவர் ஒரு படி மேலே சென்று தனது விவாகரத்தை பகிரங்கப்படுத்த கூடிய வகையில் பல வகைகளில் கொண்டாடி இருப்பது கடுமையான அதிர்ச்சியில் பலருக்கு மத்தியில் ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.
அதற்கு காரணம் இவ விவாகரத்து பெற்ற கையோடு தனது திருமண போட்டோவை கிழிப்பது போலவும் கையில் மது பாட்டலுடன் போஸ் கொடுப்பது என பல வகைகளில் போஸ் கொடுத்திருக்கிறார். இந்த படங்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
மேலும் பிறந்த நாளை கொண்டாடுவது போல இவர் டைவர்ஸ் என்ற வார்த்தைகளை இரண்டு கைகளிலும் பிடித்தபடி சிரித்தபடி தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இப்படி எல்லாம் இதைக் கூட கொண்டாடுவார்களா? என்ற கேள்விகளை வைத்திருக்கிறார்கள்.
பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிப் போக வேண்டியது தான் அதற்குத்தான் விவாகரத்து வாங்கி விட்டார்களே பிறகு எதற்கு கல்யாண போட்டோவை கிழிப்பது மற்றும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது இவை அனைத்துமே முகத்தை சுளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது என்று பலரும் பலவிதமான கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.
வருங்கால சந்ததிகள் இதுபோல இருக்கும் புகைப்படங்களையும் இவர்கள் போல நடக்கும் செயல்களையும் பார்த்தால் கட்டாயம் நமது கலாச்சாரம் இன்னும் சீர்கேடு அடையும் என்பதற்கு இதைவிட வேறு எந்த உதாரணத்தையும் நான் கூற முடியாது.