சாக்கடை புழுவாட்டம்தான் அவங்க வாழ்க்கை.. ராதிகா மீனா குறித்து பேசிய பிரபலம்..!

சினிமா என்று வந்து விட்டாலே அவர்களுக்கு சொந்த வாழ்க்கை என்று இருக்கக்கூடாது என்று நினைக்கும் அளவிற்கு தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகுபவர்களாக சினிமா பிரபலங்கள் இருந்து வருகின்றனர். சினிமா பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை தொடர்ந்து பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.

அதற்கு ஒரு வகையில் சினிமா பிரபலங்களும் காரணமாக இருக்கின்றனர் ஏனெனில் அவர்கள் தங்களது சொந்த விஷயங்களை வெளியில் எப்போதும் கூறி வருவதால் மக்களும் அதன் மீது ஆர்வம் காட்டத் துவங்குகின்றனர்.

சாக்கடை புழுவாட்டம்

உதாரணத்திற்கு ஒரு பிரபலம் தனது வீட்டில் நிகழ்ச்சி நடக்கும்பொழுது அதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் போடுவதற்கு அனுமதிக்கின்றனர். இந்த மாதிரியான நிகழ்வு நடக்கும் பொழுது அதில் ஏதாவது ஒரு தவறான விஷயம் நடந்து விட்டால் அப்பொழுது அதிக சர்ச்சையாகிறது.

சமீபத்தில் கூட ரோபோ சங்கரின் மகள் திருமணத்தில் இதே மாதிரி ஆனதை பார்க்க முடிந்தது. இதனால் தொடர்ந்து நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் என்பது சமூக வலைதளங்களில் பேசப்படும் விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து சாந்தி வில்லியம்ஸ் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

ராதிகா மீனா குறித்து பேசிய பிரபலம்

சாந்தி வில்லியம்ஸ் நிறைய சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதற்கு முன்பே அவர் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட சீரியல்கள் மூலமாக தான் அதிகமாக பிரபலமடைந்தார். இந்த நிலையில் சமீபத்தில் மீனா மற்றும் ராதிகா குறித்து அதிகமான சர்ச்சைகள் வெளியாகி வந்தன.

முக்கியமாக மீனா மறு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேச்சுக்கள் இருந்தன. அது யாரெல்லாம் கல்யாணம் செய்ய போகிறார்கள் என்று பல பேரை இணைத்து பேசி வந்தனர். இந்த நிலையில் இது குறித்து பேசிய சாந்தி வில்லியம்ஸ் கூறும் பொழுது சினிமா நடிகைகள் என்று வந்து விட்டாலே சாக்கடை புழுவை போல தான் வாழ வேண்டியிருக்கிறது.

கவலைப்பட்ட சாந்தி வில்லியம்ஸ்

எங்களது அந்தரங்க விஷயங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள் அதைக் குறித்து நிறைய வதந்திகளையும் கிளப்பி வருகிறார்கள். மீனாவை எனக்கு சின்ன வயதில் இருந்து தெரியும் மீனாவெல்லாம் நல்லா வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அவருக்கு இப்படி நடந்த பொழுது நான் மிகவும் அதற்காக வருத்தப்பட்டேன்.

அதேபோல என்னை சீரியலில் அறிமுகப்படுத்தியது ராதிகா தான் சித்தி சீரியலில் இருந்து எனக்கு ராதிகாவை தெரியும். அவர்களை பற்றி எல்லாம் வதந்திகள் வரும்பொழுது அது கவலையாக தான் இருக்கிறது என்று கூறுகிறார் சாந்தி வில்லியம்ஸ்.

About Jiraya

Check Also

பிரியங்காவின் சுயரூபம்.. பகீர் கிளப்பும் செ* புகார்கள்.. கோபிநாத்தின் அமைதி பின்னணி என்ன? விளாசம் பிரபலம்..

தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி இருக்கும் பிரியங்கா மற்றும் மணிமேகலையின் விவகாரம் பற்றி அதிக அளவு பகிர …

Exit mobile version