பிரபல சீரியல் நடிகை சரண்யா துராடி தற்போது சொல்லிக்கொள்ளும்படி எந்த சீரியலிலும் நடிக்க வில்லை என்றாலும் ரசிகர்களின் கவனத்தில் இருந்து கொண்டே இருக்கிறார். காரணம் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து ரசிகைகளின் கவனத்திற்கு ஆளாகிறார்.
அவருடைய புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பார்க்கும் பொழுது நீங்கள் உடற்பயிற்சி செய்வதை மட்டும் தான் பார்த்தீர்கள். ஆனால், உடற்பயிற்சி செய்து முடித்த பின்பு என்ன நடக்கும் என்பதை பார்ப்பதில்லை.
இதோ பாருங்கள்.. என்று கூறுவது போல கடுமையான உடற்பயிற்சி செய்துவிட்டு நடக்க முடியாமல் இடுப்பை பிடித்துக்கொண்டு நெண்டி நெழித்து நடக்கும் நடிகை சரண்யாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சரண்யா அதன் பிறகு சீரியல் நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்த இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.
அதன் பிறகு விஜய் டிவி ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்தார் அதற்குப் பிறகு புதிய சூழ்நிலைகளில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது மீண்டும் சீரியலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
சரண்யா மீண்டும் சீரியலில் நடிப்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்நிலையில் இவரது இதை வீடியோவும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.