Shreya Dhanwanthary : நடிகை ஸ்ரேயா தன்வந்திரி கடந்த 1988-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் பிறந்தார். இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட அப்பாவிற்கும் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட அம்மாவிற்கும் பிறந்தார்.
டெல்லியில் பிறந்த இவர் 2 மாத குழந்தையாக இருந்த போதே தன்னுடைய தாய் தந்தையருடன் துபாய்க்குச் சென்று வசித்தார். டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர் துபாயில் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கடந்தார்.
அதனைத்தொடர்ந்து வரங்கள் N.I.T-யில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் இருந்த இவர் 2008-ம் ஆண்டு நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா சவுத் என்ற அழகி போட்டியில் கலந்துகொண்டார்.
இந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்று பிரபலமானார். அதனை தொடர்ந்து அதே 2008-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு இறுதி பட்டியலில் நுழைந்தார். ஆனால், வெற்றி பெற முடியவில்லை.
தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் சிநேக கீதம் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதனைத் தொடர்ந்து வெற்றிகளில் நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகர் நடிகைகளுடன் இணைந்து நடித்து தற்போது பிரபலமான நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிறார்.
பிரபல பத்திரிக்கையான டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய “மோஸ்ட் டிசையர் விமன் லிஸ்ட் இன் 2020” என்ற தலைப்பில் 43-வது இடத்தை பிடித்திருந்தார் நடிகை ஸ்ரேயா தன்வந்திரி.
தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் இவர் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது படு கிளாமரான நீச்சலுடை அணிந்து கொண்டு கடற்கரையில் கிளாமர் குதிரையாக நிற்கும் தனது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மொரட்டு கட்ட.. அக்மார்க் காட்டு தேக்கு என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.