எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எந்த அழகை பார்த்துக்கிட்டே இருக்கலாம் என்று கூறும் படி தற்போது ஸ்ரேயா சரண் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் படு ட்ரெண்டிங்காக மாறிவிட்டது.
இந்த போட்டோவில் இவர் டிரான்ஸ்பரன்ட் பூ போட்ட கவுனில் படுமாடனாக காட்சியளித்திருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை பிறந்திருக்கிறதா என்ற கேள்வியை கேட்கக் கூடிய அளவு இவரது கட்டழகு மேனி தற்போது ரசிகர்களின் மனதில் சூடேற்றி விட்டது.
இவர் பார்க்கும் பார்வையில் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்கள் உள்ளது. இதை எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு ஸ்ரேயா சரணை கவித்துவமாக வர்ணித்து வருகிறார்கள்.
டேராடூனில் பிறந்து வளர்ந்த ஸ்ரேயா சரண் 2001 ஆம் ஆண்டு இசுத்தான் என்ற தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதன் பிறகு 2002 ஆம் ஆண்டு இவருக்கு சந்தோஷம் என்ற தெலுங்கு படத்தில் வெற்றி முகம் கிடைத்தது.
இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்த போது தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே ரசிகைகள் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்ட இவருக்கு முன்னணி நாயகர்களோடு இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. அந்த வருசையில் 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்தார்.
இதனை அடுத்து இவருக்கு மழை, குட்டி, திருவிளையாடல், அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து மெகா ஹிட் படங்களில் நடித்த நாயகியின் அந்தஸ்தை பெற்றார்.
உச்சகட்ட நடிகையாக திரையுலகில் இருக்கும் போதே இவர் கிளாமர் காட்ட தயங்கியதில்லை. அது மட்டும் அல்லாமல் திரையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீர் என்று ஒருவரை திருமணம் செய்து கொண்டு திரை உலகுக்கு குட் பை சொன்னார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதுமே புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் இப்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பாட்டு ரசிகர்கள் அனைவரும் அப்படியே மட்டையாகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.