Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

சிம்பு.. கீர்த்தி சுரேஷ்.. இருவருக்கும் தீராத பிரச்சனை.. சும்மா இருக்க விட மாட்டாங்க போல..!

பொதுவாகவே திரை உலகில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் இன்றளவும் உள்ளது. அந்த வரிசையில் டி ஆர் ராஜேந்திரனின் மகன் சிலம்பரசன் மற்றும் மலையாள நடிகையான மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரை உலகில் தங்களுக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கிறார்கள்.

இருவருமே குழந்தை நட்சத்திரமாக திரை உலகிற்கு அறிமுகமாகி இன்று ஹீரோ, ஹீரோயினியாக ஜொலித்து வருவதோடு மட்டுமல்லாமல் பல மாஸ் கிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் நிலைத்து இருக்கிறார்கள்.

சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ்..

தாங்கள் நடிக்கும் படத்தில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்களாக மாறி இருக்கும் இவர்கள் இருவருக்கும் சினிமா உலகை தாண்டி கிசுகிசுக்கள் வருவது என்பது அதிக அளவு உள்ளது என சொல்லலாம்.

அந்த வகையில் நடிகர் சிம்பு இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் இவரை பற்றி பல்வேறு முன்னணி நடிகைகளோடு இணைத்து பேசியதோடு மட்டுமல்லாமல் சமீப காலமாக வாரிசு நடிகையை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்பது போன்ற செய்திகளும் வெளி வர ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில் அண்மையில் பிரபல தெலுங்கு நடிகரின் மகளை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதற்காக ஆயிரம் கோடி வரதட்சணை கொடுக்க இருப்பதாகவும் செய்திகள் இணையங்களில் காட்டுத்தீ போல பரவி இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இதனை அடுத்து இந்த திருமணம் செய்திகளெல்லாம் வதந்தி என்று சிம்பு தரப்பினர் கூறியதை அடுத்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

இருவர் இடையே தீரா பிரச்சனை..

இந்த பிரச்சனையைப் போலவே நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இதே பிரச்சனை தொடர்ந்து வருகிறது. இவர் தனது நண்பரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார், என்றும் தொழில் அதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்பது போன்ற தொடர் செய்திகளால் இவரின் ரசிகர்கள் வேதனை அடைந்து இருக்கிறார்கள்.

எனினும் தற்போது நடிகர் சிம்பு மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் சினிமாவில் அதிதீவிரமாக கவனத்தை செலுத்தி வருகின்ற வேளையில் இது போன்ற வீணான விமர்சனங்கள் மட்டுமல்லாமல் கிசுகிசுக்கள் எதனால் எழுகிறது என்பது தெரியவில்லை.

என்ன? தெரிந்து கொள்ளலாமா..

எனினும் சிம்பு பற்றி அடிக்கடி இணையங்களில் வரக்கூடிய கிசுகிசுக்கள் அனைத்துமே பொய் என்பது போல தற்போது சிம்பு பேசியிருக்க கூடிய பேச்சு மூலம் புரிந்து உள்ளது.

மேலும் கீர்த்தி சுரேஷும் இது போன்ற கிசுகிசுகளுக்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருப்பதின் மூலம் அது வெறும் கிசுகிசுக்கள் தான் என்பது ஊர்ஜிதமான நிலையில் ரசிகர்கள் அனைவரும் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷின் உண்மை நிலையை அறிந்து கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்து இவர்கள் சும்மா இருந்தால் கூட ஊடகங்கள் இவர்களை சும்மா விடாது போல என சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த தீர்க்க முடியாத பிரச்சனை விரைவில் முற்றுப்பெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version